பக்கம் எண் :

330யுத்த காண்டம் 

இராமனைக் காணப் பெற்றிலேம் என்று; கானகக் கரி என-
(தலைமையானையைக் காணாத)   காட்டு யானைகள் போல;
கலங்கினார்- வருந்தினார்கள்; வீரர் வேறு உளார் - பிற
வீரர்கள்  எல்லாம்;   கடல்  மீனெனக் கலங்கினார்
(சேதுபந்தன காலத்து) கடல் மீன்கள் போல் நொந்தனர்.
 

(82)
 

இராவணன் தேர்க்கொடியை இராமன் வீழ்த்தல்
 

9786.

எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக் 

கொய்தனன் அகற்றி, வெங் கோலின் கோவையால் 

நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன 

செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 

 

இராகவன்-; எய்தன   சரம்   எலாம் -  (இராவணனால்)
எய்யப்பட்ட அம்புகளையெல்லாம்;   இமைப்பின்  முந்துற -
இமைப்பொழுதின் முன்; அகற்றிக்  கொய்தனன் -   அழித்து
ஒழித்தனன்; நொய்தென -   (பின்னர்) விரைவாக; அரக்கனை
நெருங்க
- இராவணனை நெருங்குமாறு சென்று; வெங்கோலின்
கோவையால்
- கொடிய   அம்புத்   தொகுதியால்; நொந்தன
செய்தனன்
- அவன்   வருந்தும்படி   செய்தான்;   அமரர் 
தேறினார்
- தேவர்கள் ஆறுதல் கொண்டனர்.
 

(83)
 

கலிவிருத்தம் (வேறு)
 

9787.

தூணுடை நிரை புரை கரம் அவைதொறும் அக் 

கோணுடை மலை நிகர் சிலை இடை குறைய, 

சேணுடை நிகர் கணை சிதறினன் - உணர்வொடு 

ஊணுடை உயிர்தொறும் உறைவுறும் ஒருவன். 

 

உணர்வொடு - நல்லுணர்வோடு; ஊணுடை- தன்னை உணவாகக்
கொள்ளும்; உயிர்   தொறும்  உறைவுறும் ஒருவன்- உயிர்களிடம்
விரும்பி வசிக்கும் இறைவனாகிய   இராமன்; தூணுடை நிரை புரை-
தூண்களின்   வரிசையை ஒத்த;   கரம் அவை தொறும் - பத்துக்
கைகளிலும் உள்ள; - அந்த; கோணுடை மலை நிகர் - வளைந்த
மலைகள் போன்ற; சிலை இடை குறைய- விற்கள் துண்டு படும்படி;
சேணுடை- தொலை தூரம் செல்வனாகிய; நிகர்