கணை - தமக்குத் தாமே நிகராகிய அம்புகளை; சிதறினன் - தூவினான். |
'உண்ணும் சோறு' என்று எம்பெருமானை நம்மாழ்வார் உரைத்தாற்போல இறைவன் ஞானிகள் அனுபவித்துண்ணும் அன்னமாகிறான். 'நெக்கு நெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன்னார்சடைப் புண்ணியன்' (தேவாரம் 1204:9) என்ற வரிகள் ஒப்பு நோக்கற்குரியன. |
நிகர் கணை - ஒளி கொண்ட அம்பு என்பாரும் உளர். |
(84) |
| 9788. | கயில் விரிவு அற வரு கவசமும் உருவிப் |
| பயில் விரி குருதிகள் பருகிட, வெயிலொடு |
| அயில் விரி சுடு கணை கடவினன் - அறிவின் |
| துயில்வுழி உணர்தரு சுடர் ஒளி ஒருவன். |
| |
துயில்வுழி - யோக நித்திரையின் கண்; அறிவின் உணர் தரு - தன் மூதுணர் இயல்பால் அனைத்தையும் உணரவல்ல; சுடர் ஒளி ஒருவன்- பேரொளிப் பிழம்பான ஒப்பற்ற இறைவன்; (இராமபிரான்), கயில் விரிவு அற வரு- மூட்டுவாய் விரிதலில்லாத; கவசமும் உருவி - (இராவணன்) கவசத்தையும் ஊடுருவிக் கொண்டு; பயில் விரி குருதிகள் பருகிட- (உடலில்) விரவியுள்ள இரத்தத்தைப் பருகுமாறு; வெயிலொடு - ஒளியோடு; அயில் - கூர்மையும்; விரி சுடு கணை- பரவிய வெப்பம் மிக்க அம்பினை; கடவினன்- (இராவணன் மீது) ஏவினான். |
கயில் - மூட்டுவாய்; அறிவின் துயில் - திருமாலின் அறிதுயில் இங்குக் கூறப்பட்டது. |
(85) |
| 9789. | திசை உறு துகிலது, செறி மழை சிதறும் |
| விசை உறு முகிழது, விரிதரு சிரனோடு |
| இசை உறு கருவியின் இனிது உறு கொடியைத் |
| தசை உறு கணைகொடு தரை உற விடலும், |
| |
திசை உறு - திக்குகளில் பொருந்திய; துகிலது - ஆடையுடையதும்; செறி மழை சிதறும்- அடை மழை பொழிவதும்; விசை உறு முகிழது - வேகம் மிக்க அரும்பு போன்ற உறுப்பினை உடையதும்; விரிதரு சிரனோடு- விரிந்த தலையுடன் கூடிய; இசை உறு கருவியின் - இசைக் கருவியான வீணையினை; இனிது உறு கொடியை- அழகுறக் கொண்டிருப்பதுமான |