(இராவணன்) கொடியை; தசை உறு கணை கொடு - புலால் பொருந்திய தன் அம்பினால்; தரை உற விடலும் - (இராமன்) தரையில் அறுத்து வீழ்த்தியதும். |
(86) |
| 9790. | படை உக, இமையவர் பருவரல் கெட, வந்து |
| இடை உறு திசை திசை இழுகுற, இறைவன் |
| அடையுறு கொடிமிசை அணுகினன் - அளவு இல் |
| கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். |
| |
கடையுக - கடையுகத்தின்; முடிவு எழு - முடிவில் பொங்கியெழும்; அளவில் கடல்புரை கலுழன் - மிகப்பெரிய கடல் போலும் பெருந்தோற்றமுள்ள கருடன்; படை உக - (இராவணனுடைய) விற்படை குறைபட்டபோது; இமையவர் பருவரல் கெட- தேவர் துயர் நீங்கும்படி; வந்து - பூமிக்கு வந்து; இடை உறு - இடம் பொருந்திய; திசை திசை இழுகுற - பல திசைகளிலும் (சிறகு) வீசி; இறைவன் - இராமபிரானுடைய; அடையுறு - (தேரில்) அமைந்துள்ள; கொடிமிசை - கொடிமீது; அணுகினன் - சார்ந்தனன். |
(87) |
| 9791. | பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக் |
| கண் அகன் உலகினை வலம் வரு கலுழன் |
| நண்ணலும், இமையவர், 'நமது உறு கருமம் |
| எண்ணலம், முனிவினின் இவறினன்' எனவே. |
| |
ஒரு பரவைக் கண்ணகன் உலகினை - ஒப்பற்ற கடல் சூழ்ந்த இடமகன்ற உலகினை; வலம் வரு கலுழன்- வலமாகச் சுற்றி வரும் கருடன்; பண்ணவன் உயர் கொடி என - இராமபிரானுடைய சிறந்த கொடியாகும் என்று; நண்ணலும்- வந்து பொருந்துதலும்; இமையவர் - தேவர்கள்; 'நமது உறு கருமம் எண்ணலம்' - இனி நம் செயல்களை மட்டுமே கருதமாட்டோம்; முனிவினன் - சினம் மிக்க கருடன்; இவறினன் - (பெருமான் தேர் மீது) ஏறினன்; என- என்று கூறுதலும். |
பரவை - காரணப் பெயர், பரந்திருப்பது. |
(88) |
| 9792. | ஆயது ஓர் அமைதியின், அறிவினின் அறிவான் |
| நாயகன் ஒருவனை நலிகிலது உணர்வான், |