பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்333

ஏயினன், இருள் உறு தாமதம் எனும் அத்

தீவினை தரு படை - தெறு தொழில் மறவோன். 

 

ஆயது   ஓர்   அமைதியின் -   அப்படிப்பட்ட  சூழலில்; 
தெறுதொழில்    மறவோன்
  -   அழிவுச்   செயல்   வல்ல  
கொடியவனாகிய  இராவணன்;  அறிவினின்  அறிவான்நாயகன் 
ஒருவனை
 -  உணரத்தக்கது  உணரும்  தலைவனான   ஒப்பற்ற   
இராமனை;   நலிகிலது  உணர்வான்- (தன் அம்புகள்) துன்பம் 
செய்யாதென    அறிந்தவனாகி;    இருள்  உறு  -  இருட்டை 
விளைவிக்கின்ற; தாமதம் எனும் - தாமதாத்திரம்   எனப்பெயர் 
பெற்ற; அத்தீவினை தருபடை- கெடுதலைச் செய்யும் கணையை; 
ஏயினன்
- ஏவினான்.
 

 தமஸ் - இருள், இருள் உறு (படை) - தாமதாத்திரம்
 

(89)
 

9793.

தீ முகம் உடையன சில; முகம் உதிரம் 

தோய் முகம் உடையன; சுரர் முகம் உடைய; 

பேய் முகம் உடையன; பிலமுகம் நுழையும் 

வாய்முகம் வரி அரவு அனையன வருவ. 

 

(மேற்குறித்த  தாமதாத்திரத்திலிருந்து  புறப்பட்ட  அம்புகளில்) 
சில தீமுகம் உடையன- சில நெருப்புமிழ் முகம் படைத்திருந்தன 
(சில);   முகம் உதிரம் தோய் முகம் உடையன- சில அம்புகள் 
குருதி தோய்ந்த முகம் கொண்டிருந்தன;   சுரர் முகம் உடைய
(சில)  தேவர் முகம் படைத்திருந்தன;   பேய் முகம் உடையன
(சில) பேய்களின் முகத்தோடு இருந்தன; பில முகம் - குகைக்குள்; 
நுழையும் - செல்கின்ற; வாய்முகம் - வாயும் முகமும் கொண்டன 
(சில); வரி அரவு அனையன வருவ- கோடுகளுடன் கூடிய 
பாம்புகளைப் போல் வந்தன.
 

(90)
 

9794.

ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும், 

இரு திசை எயிறு உற வருவன; பெரிய; 

கருதிய கருதிய புரிவன; கனலும் 

பருதியை மதியொடு பருகுவ - பகழி. 

 

(மேலும்) பகழி - இந்த  அம்புகள்; ஒரு  திசை முதல்- ஒரு
திக்கின் தொடக்க முதலாக;  கடை ஒரு திசை அளவும்- (அதற்கு) 
மறுதலையான) ஒரு திக்கின்  முடிவு வரையிலும்;  இருதிசை - இரு 
திசைகளிலும்; எயிறு உற- பற்களைக் காட்டிக் கொண்டு; வருவன