பக்கம் எண் :

34யுத்த காண்டம் 

அன்று - பெண்ணைக்  கொலை  செய்தல் என்பது மண்ணுலக
இயல்பன்று வானுலகத்தோர் நெறி அன்று; நீதி அன்று; தலத்து
இயல்பு  அன்று
-   நீதிக்குரியதும்  அல்ல  எவ்விடத்துக்கும்
இயல்பல்ல;   மேலோர்   தருமமேல்,  அதுவும்  அன்று-
பெரியோர்கள் பின்பற்றிய தரும நெறியோ எனில் (இத்தருமத்தால் 
இதைச் செய்யலாம் என அனுமதிக்கப் பட்டதோ எனின்) அதுவும் 
அன்று; வலத்து, இயல்பு அன்று - இது செய்தல்) வலிமையின் 
பாற்பட்டதுமன்று;   மாயாப்   பழிகொள   மறுகுவாயோ?
(அப்பெண்ணைக்  கொலை  செய்து)  என்றும் அழியாத பழயை 
ஏற்று  (பின்பு எண்ணி) மனங்கலங்குவாயோ?
 

புலத்தியன் - பிரம தேவனின் மகன். அம்முனிவனின் மகன்
விச்சிரவசு.  அவன்  மகன் இராவணன். மறுகுதல் - கலங்குதல்.
இராவணன்  புண்ணிய  விரதம்   மேற்கொண்டதனை  மாரீசன்
கூற்றால் (கம்ப. 3245) அறியலாம். 
 

(59)
 

9245.

'இன்று நீ இவளை வாளால் எறிந்துபோய் 

இராமன்தன்னை

வென்று மீண்டு, இலங்கை மூதூர் எய்தினை 

வெதும்புவாயோ?

பொன்றினள் சீதை; இன்றே, புரவல! 

புதல்வன்தன்னைக்

கொன்றவர்தம்மைக் கொல்லக் கூசினை போலும்!' 

என்றான்.

 

நீ இன்று இவளை  வாளால்  எறிந்துபோய்- நீ இன்றைக்கு
இச்சீதையை  வாளால் வெட்டிவிட்டுச் சென்று;  இராமன்  தன்னை
வென்று இலங்கை மூதூர் மீண்டு எய்தினை
- இராமனை வென்று
இலங்கையாகிய பழமை வாய்ந்த (நம்) நகரத்துக்குத்   திரும்பி வந்து; 
இன்றே   பொன்றினள்   சீதை   வெதும்புவாயோ
  - இன்றே
(நீ கொல்வாயானால்) இறந்துபடும் சீதைக்காக (பிறகு நினைந்து) மனம் 
வெதும்புவாயோ?   புரவல!  புதல்வன்  தன்னைக்  கொன்றவர் 
தம்மை
- அரசே! (நின்)  மகனைக் கொன்றவர்  தம்மை; கொல்லக் 
கூசினை போலும்  என்றான்
-  கொல்லுவதற்குப்  பின்வாங்கினை 
போலும்' என்றான்.
 

'சீதையைக் கொன்ற பின்பு சென்று இராமனை வென்று
மீள்வதால் என்பயன்'  என்கிறான் மகோதரன். அத்துடன்
பெண்ணைக்