வீடணன் புலம்பல் |
அறுசீர் ஆசிரியவிருத்தம் (வேறு) |
9921. | உண்ணாதே உயிர் உண்ணாது ஒரு நஞ்சு; |
| சனகி எனும் பெரு நஞ்சு உன்னைக் |
| கண்ணாலே நோக்கவே, போக்கியதே |
| உயிர்; நீயும் களப் பட்டாயே! |
| எண்ணாதேன் எண்ணிய சொல் இன்று இனித் தான் |
| எண்ணுதியோ? - எண் இல் ஆற்றல் |
| அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் |
| பிரளயமே! அமரர் கூற்றே! |
|
எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! - அளவற்ற ஆற்றல்களின் உறைவிடமாயிருந்த என் அண்ணனே! என் அண்ணனே! அசுரர்கள் தம் பிரளயமே - அசுரர்கட்கு எல்லாம் ஊழிக்காலமாய் உருவெடுத்தவனே!; அமரர் கூற்றே!- தேவர்கட்கு எல்லாம் எமனாய் இருந்தவனே!; ஒரு நஞ்சும் - எந்த விடமும்; உண்ணாதே உயிர் உண்ணாது- உண்ணாமல் ஓர் உயிரை உண்ணாது; சனகி எனும் பெரு நஞ்சு- (இதற்கு மாறாக) சானகி என்னும் கொடிய விடம்; கண்ணாலே நோக்கவே- (நீ) கண்ணாலே கண்ட மாத்திரத்தில்; உன்னை உயிர் போக்கியதே - உன் உயிரைப் போக்கியதே; நீயும் களப்பட்டாயே- (ஒப்புயர்வற்ற பெருவீரனாகிய) நீயும் (சாமானியன் போன்று) படுகளப் பட்டு வீழ்ந்து கிடந்தனையே; எண்ணாதேன் எண்ணிய சொல் - எண்ணத் தெரியாதவன் என்று (உன்னால் கருதப்பட்ட) நான் எண்ணி உரைத்த சொற்களை;இன்று இனித்தான் எண்ணுதியோ?- இந்த இறுதிக் காலத்தில் இப்போது தான் எண்ணுகின்றாயா? |
''திட்டியின் விடமன்ன கற்பின் செல்வி'' (கம்ப. 7351) என்பது காண்க. ''அசுரர்களின் பிரளயமே!'' மகாகவிகட்கே வாய்க்கும் சொல்லாட்சி. |
(218) |
9922. | ''ஓர் ஆசை ஒருவன்மேல் உயிர் ஆசைக் |
| குலமகள்மேல் உடைய காதல் |
| தீர்; ஆசை பழி'' என்றேன்; எனை முனிந்த |
| முனிவு ஆறித் தேறினாயோ? |