இராவணன் புலம்பல் |
9191. | 'வாய்ப் பிறந்தும், உயிர்ப்பின் வளர்ந்தும்,வான் |
| காய்ப்பு உறும்தொறும் கண்ணிடைக் காந்தியும், |
| போய்ப் பிறந்து, இவ் உலகைப் பொதியும் வெந் |
| தீப் பிறந்துளது, இன்று' எனச் செய்ததால். |
|
வாய்ப்பிறந்தும் உயிர்ப்பின் வளர்ந்தும்- (இராவணனது) வாயில் பிறந்தும் அவனது மூச்சுக்காற்றில் வளர்ந்தும்; வான் காய்ப்பு உறும் தொறும் கண்ணிடைக் காந்தியும் போய்ப் பிறந்து - பெரும் வெறுப்பு (வளர்ந்து) தோன்றுந் தோறும் கண்களிலே எரிந்து போய்த் தோன்றி; 'இவ்உலகைப் பொதியும் வெந்தீ - 'இவ்வுலகத்தையெல்லாம் மூடுகின்ற வெப்பமிக்க தீ; இன்று பிறந்துளது' எனச் செய்ததால் - இன்று பிறந்தது' என்று உலகம் சொல்லுமாறு பரவியது. |
உலகைப் பொதியும் வெந்தீ - ஊழித்தீ. வான் - பெருமை, காய்ப்பு - வெறுப்பு. |
(6) |
9192. | படம் பிறங்கிய பாந்தளும் பாரும் பேர்ந்து, |
| இடம் பிறங்கி, வலம்பெயர்ந்து ஈடு உற, |
| உடம்பு இறங்கிக் கிடந்து உழைத்து, ஓங்கு தீ |
| விடம் பிறந்த கடல் என வெம்பினான். |
|
படம் பிறங்கிய பாந்தளும் பாரும் - படம் விளங்குகின்ற ஆதிசேடனும், அவனால் தாங்கப்பட்ட பூமியும்; இடம் பேர்ந்து பிறங்கி, வலம் பெயர்ந்து ஈடு உற- இடப்பக்கமாகப் பேர்ந்து பொருந்தியும் வலப்பக்கமாகப் பெயர்ந்து பொருந்தியும் வருத்தமுற; இறங்கிக் கிடந்து உடம்பு உழைத்து - இராவணன் தன் ஆசனத்திலிருந்து இறங்கி தரையில் கிடந்து உடம்பு வருந்தி; ஓங்குதீ விடம் பிறந்த கடல் என வெம்பினான் - ஓங்கிய கொடுமையுடைய நஞ்சு தோன்றிய கடல்போல வெதும்பினான். |
இராவணன் தரையில் கிடந்து வருந்தும்போது இடப்பக்கமும் வலப்பக்கமுமாக உருண்டு புரண்டான். அங்ஙனம் அவன் புரளும் போது பூமியும் அதனைத் தாங்கியுள்ள ஆதிசேடனும் அவன் புரளுதற்கேற்ப இடப்பக்கமும் வலப்பக்கமுமாகச் சாய்ந்து நிலை கெட்டு வருந்தின என்பதாம். நஞ்சு தோன்றிய கடல் அந்நஞ்சினால் |