பக்கம் எண் :

40யுத்த காண்டம் 

நாற்பெரு வாயிலூடும்- திறந்த நான்கு பெரிய வாயில் வழியாக; 
இலங்கை ஊர் நடக்கும் தானை- இலங்கை மாநகரை நோக்கி 
நடக்கின்ற அச்சேனையானது; காலன்தானே கார்க் கருங்கடலை 
- யமனே கரிய நிறம் வாய்ந்த பெரிய கடலை; உலகம் யாண்டும் 
சுமை பொறாது என்ன
- உலகம் எவ்விடத்தும் சுமை தாங்காது 
என்ற காரணத்தால்; மற்றோர் இடத்திடை சேர்ப்பது போன்றது 
- பிறிதோர் இடத்தில் சேர்ப்பதைப் போன்றிருந்தது. 
 

(6)
 

9253.

'நெருக்குடை வாயிலூடு புகும் எனின், நெடிது காலம் 

இருக்கும் அத்தனையே' என்னா, மதிலினுக்கு உம்பர் 

எய்தி,

அரக்கனது இலங்கை உற்ற - அண்டங்கள் 

அனைத்தின் உள்ள

கருக் கிளர் மேகம் எல்லாம் ஒருங்கு உடன் கலந்தது 

என்ன.

 

நெருக்குடை வாயிலூடு புகும் எனின் - நெருக்கத்தை உடைய
வாயிலின்   வழியாக  உள்ளே நுழைவோம் என்றால்; நெடிது காலம்
இருக்கும்  அத்தனையோ  என்னா
-   'நெடிதுகாலம்   காத்துக்
கொண்டிருக்கும் அவ்வளவே; (உள்ளே புகல் அரிது)' என்று கருதி
மதிலினுக்கு உம்பர் எய்தி-   மதிலுக்கு   மேல்  ஏறிச் சென்று;
அண்டங்கள் அனைத்தின் உள்ள- எல்லா அண்டங்களிலுமுள்ள;
கருக்கிளர்   மேகம்   எல்லாம் -   கருக்கொண்ட மேகங்கள்
எல்லாம்; ஒருங்குடன் கலந்தது என்ன அரக்கனது இலங்கை உற்ற
- ஒருசேர உடன் கலந்தது என்னுமாறு வந்த சேனைகள் அரக்கனாகிய 
இராவணனுடைய இலங்கை நகரை அடைந்தன. 
 

(7)
 

இராவணன் சேனைகளை நோக்குதல்
 

9254.

அதுபொழுது, அரக்கர்கோனும், அணிகொள் 

கோபுரத்தின் எய்தி,

பொதுவுற நோக்கலுற்றான், ஒரு நெறி போகப் போக, 

விதி முறை காண்பென் என்னும் வேட்கையான், 

வேலை ஏழும்

கதுமென ஒருங்கு நோக்கும் பேதையின்காதல் 

கொண்டான்.