பக்கம் எண் :

400யுத்த காண்டம் 

போர் ஆசைப்பட்டு எழுந்தகுலம் முற்றும்

பொன்றவும்தான் பொங்கி நின்ற 

பேர் ஆசை பெயர்ந்ததோ? - பெயர்ந்து ஆசைக் 

கரி இரியப் புருவம் பேர்த்தாய்! 

 

ஆசைக்கரி பெயர்ந்து இரியப் புருவம் பேர்த்தாய் 
- திசை யானைகள் நிலை பெயருமாறு புருவம் பெயர்க்கும் 
திறல் வாய்ந்தவனே; ஓராதே - உணராமல்; ஒருவன் தன் 
உயிர் ஆசைக் குலமகள் மேல்
- வேறு ஒருவன் தன் 
உயிர் போன்று நேசித்து வந்த ஒரு குல மகளின் மேல்; 
உற்ற காதல்- கொண்ட ஆசை; தீராத வசை என்றேன் 
- (என்றும்) தீராப் பழியைத் தரும் என்று கூறினேன்; எனை 
முனிந்த முனிவு ஆறித் தேறினாயோ?
- (அப்போது) நீ 
என் மேற் கொண்ட கோபம் (தவறு என்று) (இப்போதாவது) 
தணிந்து தெளிவடைந்தாயா?; போர் ஆசைப்பட்டு எழுந்த 
- போரிலே ஆசை கொண்டு எழுந்த; குலம் முற்றும் 
பொன்றவும்
- குலம் முழுவதும் அழிந்து படவும்; பொங்கி 
நின்ற பேர் ஆசை பெயர்ந்ததோ?
- மேன்மேல் உயர்ந்து 
வந்த உன் பேராசை (இப்போதாவது) ஒழிந்ததா?
 

(219)
 

9923.

''அன்றுஎரியில் விழு வேதவதி இவள்காண்;

உலகுக்கு ஓர் அன்னை'' என்று, 

குன்று அனைய நெடுந் தோளாய்! கூறினேன்; 

அது மனத்துள் கொள்ளாதே போய், 

உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில் 

படக் கண்டும், உறவு ஆகாதே, 

பொன்றினையே! இராகவன்தன் புய வலியை 

இன்று அறிந்து, போயினாயோ!''* 

 

அன்று- ஒரு காலத்தில்;   எரியில் விழு வேதவதி- தீயில்
(உன்னைச் சபித்து) விழுந்த வேதவதி என்பவள்; உலகுக்கு 
ஓர் அன்னை
- உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தாயாகி 
(சீதையென்னும்); இவள் காண்- இவளாகி வந்துள்ளாள்; என்று
- என்று; குன்று அனைய நெடுந்தோளாய்- மலை போன்ற 
திண்மையுடைய பெருந்தோளனே!; கூறினேன்- நான் சொன்னேன்; 
அது மனத்துள் கொள்ளாதே போய்
- அவ்வுரையை மனத்துட் 
கொள்ளாமல் போய்; உன் தனது குலம் அடங்க- உன்னுடைய 
குலம் முழுவதும் அழிய; அமரில் உருத்து- போரில் சினந்து; 
படக் கண்டும்
- இறந்து