பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்401

மடிதலைக் கண்டும்; உறவு ஆகாதே -   (நீ இராமபிரானை)
உறவாகக்   கொள்ளாமல்;  பொன்றினையே- இறுதி 
வரையில்   அவனைப் பகையாகக் கொண்டு அழிந்து 
ஒழிந்தாயே; இராகவனார் புய வலியை- இராமபிரானுடைய 
தோள்வலியை (நான் சொல்லும்போது அறியாமல்); இன்று 
அறிந்து போயினாயோ
- (சாகும்போது) அறிந்துகொண்டு 
போயிருக்கிறாயோ!
 

இறைவனுக்கும்   உயிர்கட்கும் உள்ள   ஒன்பது வகை 
(நவவித சம்பந்தம்) உறவுகளில், பிதா புத்திர உறவும் ஒன்று.
உறவாகக் கருத வேண்டிய தலைவனைப் பகையாக மயக்க 
உணர்வால். பிறழ உணர்ந்து, இராவணன் போன்றோர் 
அழிகின்றனர் என்பதனை ''உறவாகாமல் பொன்றினையே'' 
என்பதனால் பெறவைத்தார்.
 

(220)
 

9924.

'மன்றல் மா மலரானும், வடி மழு வாள் 

படையானும், வரங்கள் ஈந்த

ஒன்று அலாதன உடைய முடியோடும் 

பொடி ஆகி உதிர்ந்து போன;

அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் 

அவன் நாட்டை அணுகாநின்ற

இன்றுதான் உணர்ந்தனையே, இராமன்தன் 

யாவருக்கும் இறைவன் ஆதல்? 

 

மன்றல்  மா  மலரோனும்-   மணமுள்ள தாமரை மேல்
வாழ்பவனாகிய பிரமதேவனும்; வடி மழுவாள் படையானும் 
- கூரிய மழுவாளைப் படையாகக் கொண்ட சிவபிரானும்; ஈந்த
- கொடுத்தருளிய; வரங்கள் - வரங்கள்; ஒன்று அலாதன 
உடைய
 - பத்தாகவுள்ள;  முடியோடு- உன் தலைகளோடு 
சேர்ந்து; பொடியாகி உதிர்ந்து போன- பொடிப் பொடியாக 
உதிர்ந்து போயின; அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் 
- (நீ சீதையை எடுத்து வந்து) அன்று இராமனின் ஆற்றலை 
உணராது போனாலும்; அவன் நாட்டை அணுகா நின்ற 
இன்றுதான்
- அந்த பரமபதத்தை அடையா நின்ற இன்றைக்கு 
ஆகிலும்; இராமன் தான் யாவர்க்கும் இறைவன் ஆதல்
இராமனே அனைவர்க்கும் இறைவன் ஆவான் என்பதனை; 
உணர்ந்தனையே
- உணர்ந்தாயோ?  

(221)
 

9925.

'வீர நாடு உற்றாயோ? விரிஞ்சனாம்

யாவருக்கும் மேலாம் முன்பன்