பக்கம் எண் :

402யுத்த காண்டம் 

பேரன் நாடு உற்றாயோ? பிறை சூடும்

பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ?

ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, 

கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க,

மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? 

குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 

 

வீரநாடு உற்றாயோ?- வீரர்கள் அடையும் துறக்க நாட்டை
அடைந்தாயோ?;   விரிஞ்சன் ஆம் யாவருக்கும் மேலாம் 
முன்பன்  பேரன் நாடு உற்றாயோ?
-  விரிஞ்சன் எனும் 
பெயரினனாய் (உயிர்களில்) எவர்க்கும் மேன்மையும் முதன்மையும்
உடையவனான நான்முகன் ஆகிய உன் பாட்டனின் நாட்டினை
அடைந்தாயோ?; பிறைசூடும் பிஞ்ஞகன் தன் புரம் பெற்றாயோ
-   பிறை  நிலவைச் சிரத்தில் சூடும் சிவபெருமானின் கயிலாய
புரத்தையடைந்தாயோ?; அணா- அண்ணா!;  உன் உயிரை 
அஞ்சாதே கொண்டு அகன்றார் ஆர்?
- உனது உயிரை 
அஞ்சாமற் கொண்டு சென்றவர் தான் யார்?; அது எலாம் நிற்க
அது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்; மாரனார் தனியாட்டம்
தவிர்ந்தாரோ?
- மன்மதனார் (உன்பால் ஆடிய) வலிய 
ஆட்டத்தை (இப்போதாவது) நிறுத்திக்கொண்டாரோ; மதியம்
என்பான் குளிர்ந்தானோ?
- (காம தாபத்தால் உன்னை
எரித்துக் கொண்டிருந்த) சந்திரன் (இப்போதாவது)
குளிர்ச்சி தருபவன் ஆனானோ?
 

வீரநாடு - வீர சொர்க்கம்.
 

(222)
 

9926.

''கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்'' என்று

அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, 

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி 

நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! 

நல்லாரும் தீயாரும் நரகத்தார் 

துறக்கத்தார், நம்பி! நம்மோடு 

எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே 

விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 

 

கொல்லாத மைத்துனனை - கொல்லத் தகாத மைத்துனனை;
கொன்றாய் என்று- நீ கொன்று விட்டாய் என்று;   அது 
குறித்துக் கொடுமை சூழ்ந்து
- அக்கொடுமையை மனத்துட்
கொண்டு