பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்405

தெளியாமல் (துன்பத்தில்) ஆழ்கின்றாயோ?; என்ன- என்று
கூற; தேறி- தெளிவுற்றவனாய்; அப்புறத்து நின்றான்-
அப்புறமாக நின்றான்; (வீடணன்) மயன் பயந்த நெடுங்கண்
பாவை
- மயனின் மகளாகிய பெரிய கண்களையுடைய மண்டோதரி;
அரக்கன் நிலை கேட்டாள் - இராவணன் (பட்ட) நிலையைக்
கேள்வியுற்றாள்.
 

(225)
 

மண்டோதரியும் அரக்கியரும் இராவணன் கிடக்கும் இடம் அடைதல்
 

கலிவிருத்தம்
 

9929.

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்,

புனைந்த பூங் குழல் விரித்து அரற்றும் பூசலார், 

இனம் தொடர்ந்து உடன் வர, எய்தினாள் என்ப - 

நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 

 

அனந்தம் நூறாயிரம் அரக்கர் மங்கைமார்- பல 
இலட்சக் கணக்கினரான இராட்சதப் பெண்கள்; புனைந்த 
பூங்குழல் விரித்து
- மலர் சூடிய கூந்தல்களை விரித்து; 
அரற்றும் பூசலார்
- கதறுகின்ற அழுகையினராய்; இனம் 
தொடர்ந்து
- கும்பலாகத் தொடர்ந்து; உடன் வர- கூட 
வர; நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள்
நினைவும் மறப்பும் அற்ற நெஞ்சினளாகிய மண்டோதரி; 
எய்தினாள்
- அடைந்தாள்.
 

தன்னுடைய கணவனை மறந்து விடுவது, பின் நினைவது
என்னும் நிலையின்றி, எப்போதும் கணவனை நெஞ்சுட்
கொண்டிருப்பவள் ஆதலால், ''நினைந்ததும் மறந்ததும் இலாத
நெஞ்சினள்'' என்றார். ஒப்பு. ''உன்னினேன் என்றேன், மற்று என்
மறந்தீர் என்று என்னைப் புல்லாள் புலத்தக்கனள்'' (குறள் 1316)
 

(226)
 

9930.

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன் உயிர்

புரக்கும் நன் குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் 

பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால் - 

அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதையே. 

 

இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு - தயையும் தருமமும்
துணையாகக் கொண்டு; இன்னுயிர் புரக்கும் நன் குலத்து ஒருவன்
- இனிய உயிர்களைப் பாதுகாக்கப் பிறந்த நல்ல குலத்துப் பிறந்த