பக்கம் எண் :

406யுத்த காண்டம் 

ஒருவனை;பூண்டதோர் பரக்கழி யான் என- (அவ்வாறு
செய்யாமல்) மேற்கொண்டதொரு மிகு பழி பரந்து விரிவது
போல; அரக்கியர் வாய் திறந்து அரற்றும் ஓதை-
அரக்கிமார்கள் வாயைத் திறந்து கதறுகின்ற ஓசையானது;
பரந்து நீண்டது- பரவி விரிந்தது.
 

உயர் குலத்துப் பிறந்தான் ஒருவன் செய்த பழிச் செயல்
''மதிக்கண் மறுப்போல்'' உலகமெங்கும் பரந்து தெரியும்.
அதுபோல்அரக்கியர் அழும் ஓசை உலகெங்கும் இராவணன் 
இறப்பு தெரியுமாறு பரவியது என்பதாம்.
 

(227)
 

9931.

நூபுரம் புலம்பிட, சிலம்பு நொந்து அழ,

கோபுரம்தொறும் புறம் குறுகினார் சிலர்; 

'ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம்' எனா, 

மா புரம் தவிர, விண் வழிச் சென்றார் சிலர். 

 

நூபுரம் புலம்பிட- நூபுரம் வருந்தவும்; சிலம்பு நொந்து 
அழ
- சிலம்பு புலம்பிடவும்; கோபுரம் தொறும் புறம் சிலர்
குறுகினர்
-   (நகரவாயில்) கோபுரந்தோறும் சிலர் வெளியே
வந்தனர்;   ஆபுரந்தரன் பகை அற்றது ஆம் எனா - ஓ! 
இந்திரன் பகை இன்றோடு ஒழிந்தது என்று கூறி;   மாபுரம் 
தவிர  விண் வழிச் சென்றார் சிலர்
- இலங்கையிலிருந்து 
(இராவணனின் தேவர் குல மகளிர்)   சிலர் வானுலகுக்குச் 
சென்றனர்.
 

இந்திரனோடு இருந்த பகை இன்றோடு ஒழிந்தது ஆதலால், 
இனி நம் உலகு   செல்வோம் என்று இராவணனால் கவர்ந்து 
வரப்பட்ட   தேவ மாதர் சிலர் வான்வழியே தேவஉலகம் 
சென்றனர் என்பதாம்.
 

(228)
 

9932.

அழைப்பு ஒலி முழக்கு எழ, அழகு மின்னிட,

குழைப் பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட, 

உழைப் பொலி உண் கண் நீர்த் தாரை மீது உக, 

மழைப் பெருங் குலம் என, வான் வந்தார் சிலர். 

 

அழைப்பு  ஒலி முழக்கு எழ- அழைக்கின்ற  ஒலி (இடி)
முழக்கைப் போல் எழவும்; அழகு மின்னிட- அழகு மின்னல்
போன்று மின்னிடவும்; குழை பொலி நல் அணிக்குலங்கள்
வில்லிட
- காதணி முதலிய அழகிய நல்ல அணிவகைகள் 
(வான) வில்போன்று ஒளிரவும்; உழைபொலி- மான்போல் 
திகழும்; உண்கண் - மைதீட்டப் பெற்ற கண்களிலிருந்து; 
நீர்த்தாரை மீது உக
- கண்ணீர்த் தாரைகள் (மண்) மேலே 
விழவும்; மழைப் பெரும்