முயக்கியல் முறை கெட- தழுவும் முறையெல்லாம் தவிர்த்து; முயங்கினார்கள் - (இராவணன் உடலைத்) தழுவினார்கள். |
(233) |
9937. | 'அறம் தொலைவுற மனத்து அடைத்த சீதையை |
| மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர் |
| திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை; |
| இறந்தனையோ?' என இரங்கி, ஏங்கினார். |
|
அறம் தொலைவுற- (தகாத காதலால்) தருமம் அழியுமாறு; மனத்து அடைத்த சீதையை- உன் உள்ளத்துக்குள்ளே சிறை வைத்திருந்த சீதையை; இனும் மறந்திலையோ?- இறந்த பின்பும் மறந்தாய் இல்லையோ?; எமக்கு உன் வாய் மலர் திறந்திலை- (அதனால்) எம் போன்றோர்க்கு உனது வாய் மலரை நல்கினாய் இல்லை; விழித்திலை- (எம்மை) கண் எடுத்தும் நோக்கினாய் இல்லை; அருளும் செய்கிலை- (வேறு வகையாலும்) அருள் புரிந்தாய் இல்லை; இறந்தனையோ- (நீ) இறந்து போனாயோ; என இரங்கி ஏங்கினார் - என்று இரங்கி ஏங்கி அழுதனர். |
(234) |
மண்டோதரி இராவணன் மார்பில் விழுந்து புலம்புதல் |
9938. | தரங்க நீர் வேலையில் தடித்து வீழந்தென, |
| உரம் கிளர் மதுகையான் உருவின் உற்றனள், |
| மரங்களும் மலைகளும் உருக, வாய் திறந்து, |
| இரங்கினள் - மயன் மகள், - இனைய பன்னினாள்: |
|
மயன் மகள்- மயனின் மகளும் (இராவணனின் பட்டத்தரசியும் ஆகிய) மண்டோதரி; உரம் கிளர் மதுகையான் - மனத் திண்மை வாய்ந்த வலியவனான இராவணனுடைய; உருவின்- உடலின் மேல்; தரங்க நீர் வேலையில்- அலையெறியும் நீரினையுடைய கடலின் மேல்; தடித்து வீழ்ந்தென- மின்னல் வீழ்ந்தது போல்; உற்றனள்- வீழ்ந்தவளாய்; மரங்களும் மலைகளும் உருக- (உருகும் இயல்பில்லாத) மரங்களும் மலைகளும் உருகுமாறு; வாய் திறந்து- வாய்விட்டு; இரங்கினாள் - அழுதவளாய்; இனைய பன்னினாள் - இத்தகைய மொழிகளைக் கூறினாள். |
(235) |