பக்கம் எண் :

 இராவணன் வதைப் படலம்411

''கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை

மனச் சிறையில் கரந்த காதல்

உள் இருக்கும்'' எனக் கருதி, உடல் புகுந்து,

தடவியதோ ஒருவன் வாளி?

 

ஒருவன்  வாளி -  ஒப்பற்ற  இராமபிரானின் அம்பு;  வெள்
எருக்கம் சடைமுடியான்
- வெள்ளை எருக்கம் பூவை (முடியில்)
சூடும் சிவபெருமானுடைய; வெற்பு எடுத்த திருமேனி - கயிலை
மலையைத் தூக்கிய இராவணனுடைய  அழகிய உடலின்; மேலும்
கீழும்
   - உடம்பின்    மேல்பகுதியிலும் கீழ்ப்பகுதியிலும்; எள்
இருக்கும் இடம் இன்றி
- எள் இருக்கும் இடம் கூட இல்லாமல்;
உயிர்   இருக்கும் இடம்  நாடி-    உயிர்   இருக்கும்  இடம்
முழுவதையும் தேடி; இழைத்த ஆறோ?- ஆராய்ந்த வண்ணமோ?
கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை- தேன் குடிகொள்ளும்
மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை; மனச் சிறையில்
கரந்த  காதல்
   - மனம் எனும் சிறையில் ஒளித்து  வைத்திருந்த
காதலானது;உள்   இருக்கும்  எனக் கருதி - உள்ளே (இன்னும்
எங்காவது) பதுங்கியிருக்கும்   என்று    எண்ணி; உடல் புகுந்து
தடவியதோ?
- உடல் முழுதும் நுழைந்து     (நுழைந்து) தடவிப்
பார்த்ததோ?
 

இறப்பின் பின் நிகழும் புலம்பலில் எள்ளைச் சுட்டிய நயம் காண்க.
 

(237)
 

9941.

'ஆரம் போர் திரு மார்பை அகல் முழைகள்

எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால்

தூரம் போயின, ஒருவன் சிலை துரந்த

சரங்களே; போரில் தோற்று

வீரம் போய், உரம் குறைந்து, வரம் குறைந்து,

வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்!

ஓர்அம்போ, உயிர் பருகிற்று, இராவணனை?

மானுடவன் ஊற்றம் ஈதோ!

 

ஒருவன் சிலை துரந்த சரங்கள் - ஒப்பற்றவனான இராம
பிரானுடைய வில் செலுத்திய    அம்புகள்;      ஆரம் போர்
திருமார்பை
- முத்து மாலைகள் அணிந்த அழகிய மார்பினை;
அகல் முழைகள் என - விரிந்த குகைகள்   போல; திறந்து-
பிளந்து;இவ் உலகுக்கு அப்பால்- இந்த உலகைக்   கடந்து
அப்பால்; தூரம் போயின - வெகு