பக்கம் எண் :

414யுத்த காண்டம் 

உரை கடையிட்டு அளப்ப அரிய பேர் ஆற்றல்,

தோள் ஆற்றற்கு உலப்போ இல்லை;

திரை கடையிட்டு அளப்ப அரிய வரம் என்னும்

பாற்கடலைச் சீதை என்னும்

பிரை கடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ,

தவப் பயனின் பெருமை பார்ப்பேன்?

 

அரை கடையிட்டு -    அரையைக்   கடைசியாகக் கொண்டு;
அமைவுற்ற முக்கோடி ஆயுவும்   - மூன்று கோடி ஆயுளுக்கும்;
பேர் அறிஞர்க்கேயும்- பெருமை பெற்ற  அறிஞர்களாலும்;உரை
கடையிட்டு அளப்பு அரிய
- வாய் வார்த்கைகளால் முடிவு காட்டி
அளக்க முடியாத; பேர் ஆற்றல் தோள் ஆற்றற்கு- பெருவலிமை
கொண்ட    (உன்)  தோள் ஆற்றலுக்கு;உலப்பு இல்லை - அழிவு
இல்லை (என்று நினைத்து);   தவப் பயனின் பெருமை பார்ப்பேன்
- தவங்களின்    பயனாய் வந்த வரங்களின் பெருக்கத்தை எண்ணிப்
பெருமை கொண்டிருந்தவளாகிய நான்; திரை கடையிட்டு அளப்பு
அரிய
-    அலைகளின்    முடிவு காட்டி அளக்க முடியாத; வரம்
என்னும் பாற்கடலை
- (உன்) வரங்கள் ஆகிய பாற்கடலை; சீதை
என்னும் பிரை
- சீதா தேவியாகிய பிரையானது;   கடையிட்டு-
இறுதியில் இடப்பட்டு; அழிப்பதனை -     அழிக்கப்போவதனை;
அறிந்தேனோ- அறிந்தேன் இல்லையே!
 

அரை கடையிட்டு அமைவுற்ற முக்கோடி அரையைக் கடைசியில்
கொண்ட மூன்று என்னும் கோடி இராவணன் கடைசியில் வாழ்ந்தது
அரைக் கோடி 9899ஆம் பாடல் உரை    பார்க்க.  ஆயு - ஆயுள்
கடைக் குறைந்தது. இராவணன் பெற்ற    வரம்    பாற்கடல் போல்
விரிந்திருந்தும்     சீதையென்னும்  சிறு பிரைத் துளியால் பாற்கடல்
முழுதும் அழிந்து கெட்டது என்று உருவகித்தார். முற்றுருவகம்.
 

(241)
 

9945.

'ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்?

அவை ஏழும் ஏழும் அஞ்சும்

வீரனார் உடல் துறந்து, விண் புக்கார்;

கண் புக்க வேழ வில்லால்,

நார நாள் மலர்க் கணையால், நாள் எல்லாம்

தோள் எல்லாம், நைய எய்யும்

மாரனார் தனி இலக்கை மனித்தனார்

அழித்தனரே, வரத்தினாலே!