பக்கம் எண் :

42யுத்த காண்டம் 

செல்லுவாரும், அதனைக் கேட்பாரும் எங்ஙனம் அப்பொருளை
முற்றிலும் உணராமல் இருக்கின்றார்களோ அங்ஙனமே விளக்க
முடியாத பெரும் எண்ணிக்கையான படைகளைத்தாமே முழுவதும்
உணராதவராய தூதுவர் ஒருவாறு விளக்கிக் கூறக் கேட்டான்
இராவணன். 
 

(9)
 

கலித்துறை
 

9256.

'சாகத் தீவினின் உறைபவர், தானவர் சமைத்த 

யாகத்தில் பிறந்து இயைந்தவர், தேவரை எல்லாம் 

மோகத்தின் பட முடித்தவர், மாயையின் முதல்வர், 

மேகத்தைத் தொடும் மெய்யினர், இவர்' என  

விரித்தார்.

 

சாகத் தீவினின் உறைபவர்- இவர் சாகத் தீவில்
வாழ்பவர்; தானவர் சமைத்த யாகத்தில் பிறந்து இயைந்தவர்
- அரக்கர்களை செய்த வேள்வியில் தோன்றி அமைந்தவர்;
தேவரை எல்லாம் மோகத்தின் படமுடித்தவர் - தேவர்களை
எல்லாம் மோகத்தில் விழுமாறு மாயை செய்து முடித்தவர்;
மாயையின் முதல்வர் - மாயை செய்வதில் முதன்மை பெற்றவர்;
மேகத்தைத் தொடும் மெய்யினர்- (வானில் இயங்கும்)
மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள உடம்பினை உடையவர்;
'இவர்' என விரித்தார் - இவர்கள் என ஓரணியைக் காட்டி
விரித்துக் கூறினர் தூதர்கள்.
 

சாகம் -   தேக்கு.   அம்மரங்கள்   மிகுந்திருந்தமையால்
அத்தீவு சாகத்தீவு எனப்பட்டது என்பர்.  இதனைத் தேக்கத்
தீவு எனவும் கூறுவர். இது ஏழுதீவுகளுள் ஒன்றெனவும் கூறுவர்.
ஏனையவை நாவலந்தீவு. இறலித்தீவு, இலவந்தீவு,கிரவுஞ்சத்தீவு, 
குசைத்தீவு, புட்கரத் தீவு என்பனவாம். 
 

(10)
 

9257.

'குசையின் தீவினின் உறைபவர், கூற்றுக்கும்  

விதிக்கும்

வசையும் வன்மையும் வளர்ப்பவர், வான நாட்டு 

உறைவார்

இசையும் செல்வமும் இருக்கையும் இழந்தது, இங்கு, 

இவரால்;

விசையம்தாம் என நிற்பவர், இவர் - நெடு விறலோய்!