பக்கம் எண் :

422யுத்த காண்டம் 

தாழ்வு இல் கொற்றத்து அமரர்கள் தந்தனர். * 
  

தாழ்வு  இல் கொற்றத்து அமரர்கள்-  குறைவு படாத
வெற்றியைப்  பெற்றுள்ள தேவர்கள்; சூழ்கடல் புனலும் பல
தோயமும்
-  உலகைச்  சுற்றியுள்ள எழு   கடல்   நீரும் பிற
புண்ணிய ஆற்று  நீர்களும்; நீள் முடித்தொகையும் - நீண்ட
கிரீடத் தொகைகளும்;  பிற  நீர்மையும்- பிற  அரசர்க்கேற்ற
ஆபரணங்களின் தன்மைகளும்; பாழி துற்று-  வலிமை செறிந்த;
அரி  பற்றிய   பீடமும்
- சிங்கம்   தாங்கிய   பீடமாகிய
சிம்மாசனமும்; தந்தனர் - கொண்டு வந்து கொடுத்தனர்.
  

இராவண வதத்தால் இலங்கை முழுதும் அழிந்து போன
படியால் தேவர்கள் புதிதாக   எல்லாவற்றையும்   கொண்டு
கொடுத்தனர். வேண்டியது ஒரு முடியே ஆயினும் முடித்தொகை
என்றது இராவணன்  பத்துத்  தலைகளில்   பத்து   முடிகள்
அணிந்திருந்தமை நோக்கிப் போலும். 
 

(4)
 

9956.

வாச நாள் மலரோன் சொல, மான்முகன் 

காசும் மா நிதியும் கொடு, கங்கை சூடு 

ஈசனே முதலோர் வியந்து ஏத்திட, 

தேசு உலாம் மணி மண்டபம் செய்தனன்.* 
 

மான்முகன் - மானின் முகம் உடையவனாகிய மயன் என்கிற
தெய்வத் தச்சன்; வாச நாள் மலரோன் சொல- வாசனையுள்ள
அன்றலர்ந்த    தாமரை  மலரில்  வீற்றிருக்கின்ற   பிரமதேவன்
கட்டளையிட;  காசும் மாநிதியும் கொடு-  மணிகளையும் உயரிய
பொன்னையும் கொண்டு; கங்கை சூடு ஈசனே முதலோர் வியந்திட
- கங்காநதியைத்  தலைமேற் சூடிக்  கொண்டுள்ள   சிவபெருமான்
முதலான தேவர்கள் அதிசயிக்கும் படி; தேசு உலா மணி மண்டபம்
செய்தனன்
- ஒளி பரவுகிற அழகிய திருவோலக்க பட்டாபிஷேக
மண்டபத்தைச் செய்தமைத்தான்.
 

மயன் மான்முகம் உடையவன் என்பதனை 'மான் முக நலத்தவன்,
மயன்' (கம்ப. 4578) என்பது கொண்டு அறிக. 
 

(5)
 

9957.

மெய் கொள் வேத விதி முறை விண்ணுளோர் 

தெய்வ நீள் புனல் ஆடல் திருத்திட, 

ஐயன் ஆணையினால், இளங் கோளரி 

கையினால் மகுடன் கவித்தான் அரோ.*