பக்கம் எண் :

 மீட்சிப் படலம்423

விண்ணுளோர் - விண்ணுலக   வாசிகளான  தேவர்கள்;
மெய்கொள் வேத விதிமுறை- சத்தியத்தைத்  தன்னிடத்தே
கொண்டுள்ள வேதத்திற்   கூறிய  சடங்கு   முறைகளின்படி;
தெய்வ   நீள்   புனல்  ஆடல் திருத்திட-   தெய்வத்
தன்மையுள்ள   புண்ணிய   தீர்த்தங்களினால்   அபிஷேகம்
செய்தலைச் செவ்வையாகச்  செய்ய; ஐயன் ஆணையினால்
- இராமனது கட்டளையின் வண்ணம்; இளங்கோளரி- இளைய
சிங்கத்தை ஒத்த இலக்குவன்; கையினால்- தன் திருக்கரத்தால்;
மகுடன் கவித்தான்- கிரீடத்தை வீடணன் தலைமேற் சூடினான்.
 

தத்துவ விளக்கம் தருதலின் வேதம் மெய்கொள் வேதம்
எனப்பட்டது. அரோ. அசை. 
 

(6)
 

9958.

கரிய குன்று கதிரினைச் சூடி ஓர் 

எரி மணித் தவிசில் பொலிந்தென்னவே, 

விரியும் வெற்றி இலங்கையர் வேந்தன் நீடு 

அரியணைப் பொலிந்தான், தமர் ஆர்த்து எழ. 

 

விரியும்  வெற்றி  இலங்கையர்  வேந்தன் - நிறைந்த
வெற்றியை உடைய வீடணன்; கரிய குன்று  கதிரினைச் சூடி
ஓர் எரிமணித் தவிசில் பொலிந்து என்ன
- கருநிறம் உள்ள
ஒரு மலை சூரியனைத் தலைமேல் அணிந்து  கொண்டு ஒப்பற்ற
பிரகாசிக்கிற  மணிக் கற்களால் ஆகிய பீடத்தில்  விளங்கினாற்
போல என்று சொல்லும்படி; தமர் ஆர்த்து எழ- உறவினர்கள்
மகிழ்ச்சி  ஆரவாரம்  செய்ய; அரியணைப் பொலிந்தான்
சிம்மாசனத்தில் அழகுற வீற்றிருந்தான்.
 

கரிய குன்று - வீடணன், கதிர் - முடி, எரிமணித் தலிசு -
சிம்மாசனம் எனக் கொள்க. ஏ, அசை. 
 

(7)
 

9959.

தேவர் பூ மழை, சித்தர் முதலினோர் 

மேவு காதல் விரை மலர், வேறு இலா 

மூவரோடு, முனிவர், மற்று யாவரும் 

நாவில் ஆசி நறை மலர், தூவினார்.* 

 

தேவர் - தேவர்கள்; பூ மழை- மலர் மழையையும்; சித்தர்
முதலினோர்
- சித்தர் முதலானோர்கள்; மேவு காதல் விரை
மலர்
- மிகுந்த அன்போடு  கூடிய  மணமிக்க  மலர்களையும்;
வேறு இலா மூவரோடு முனிவர் மற்று யாவரும் - தம்முள்
ஏற்றத்தாழ்வில்லாத