பக்கம் எண் :

424யுத்த காண்டம் 

மும்மூர்த்திகளும் முனிவர்களும் மற்றுள்ள அனைவரும்; நாவில்
ஆசி நறை மலர்
- தமது நாவால் கூறுகின்ற ஆசீர்வாதமாகிய
மணமிக்க    மலர்களையும்;  தூவினார்  -   வீடணன்  மேல்
சொரிந்தார்கள்.
 

சித்தர் - பதினென்கணத்துத் தேவசாதியில் ஒருவர். சித்தர்,
வித்தியாதரர்,  கின்னரர், கிம்புருடர், யக்ஷர், கந்தர்வர், கருடர்,
சாரணர் என்பவர்களைக் குறிக்கும். ஆசிச்  சொற்களை  மலர்
என்று உபசரித்தார். 
  

(8)
 

9960.

முடி புனைந்த நிருதர் முதலவன் 

அடி வணங்கி இளவலை, ஆண்டை அந் 

நெடிய காதலினோர்க்கு உயர் நீர்மை செய்து, 

இடி கொள் சொல்லன் அனலற்கு இது 

இயம்பினான்:* 

 

முடி புனைந்த-   கிரீடத்தை   அணிந்து   கொண்ட
(பட்டாபிஷேகம்  செய்து கொண்ட);  நிருதர்  முதலவன்
- அரக்கர் குலத் தலைவனாகிய வீடணன்; இளவலை அடி
வணங்கி
-  இலக்குவனைக்   காலில் வீழ்ந்து   வணங்கி;
அந்நெடிய காதலினோர்க்கு- அந்த   பேரன்பையுடைய
இலக்குவனுக்கு; ஆண்டை- அவ்விடத்தே; உயர் நீர்மை
செய்து
-   உயர்ந்த   உபசாரங்களை   எல்லாம்   செய்து;
இடிகொள் சொல்லன் - இடிமுழக்கம் போலக் கம்பீரமான
குரலை உடையவனாய்;  அனலற்கு- தன்  அமைச்சர்களில்
மூத்தவனாகிய அனலன் என்பானுக்கு; இது இயம்பினான்-
பின்வரும் வார்த்தைகளைச் சொல்லலானான்.
 

அனலன், அனிலன், அரன், சம்பாதி என்னும் நால்வர்
வீடணன் அமைச்சர்கள். (கம்ப. 6377) என்பது முன்னர்க்
கூறியது. அனலன் அவர்களுள் மூத்தவன்.
 

 (9)

9961.

'விலங்கல் நாண மிடைதரு தோளினாய்! 

இலங்கை மா நகர் யான் வரும் எல்லை, நீ 

கலங்கலா நெடுங் காவல் இயற்று' எனா, 

அலங்கல் வீரன் அடி இணை எய்தினான்.* 

 

(வீடணன்) விலங்கல் நாண மிடைதரு தோளினாய்!-
மலைகளும் வெட்கமுறும்படி அவற்றினும் பெரிதாக நெருங்கி