பக்கம் எண் :

 மீட்சிப் படலம்425

இருக்கின்ற  தோள்களை  உடைய  அனலனே!;  நீ  யான்
இலங்கை மாநகர் வரும் எல்லை
- நீ! யான் (இராமனோடு
அயோத்தி சென்று) இலங்கை நகரத்துக்குத் திரும்பி வரும் வரை;
கலங்கலா நெடுங்காவல் இயற்று- உயிர்கள் யாவும் கலக்கம்
உறாதபடி நீண்ட காவலைச் செய்வாயாக; எனா- என்று சொல்லி
(அவனை அரசப் பிரதிநிதியாக  ஆக்கி);  அலங்கல்  வீரன் -
மாலை  அணிந்த  வீரனாகிய இராமபிரானது; அடி  இணை
எய்தினான்
- திருவடி இணைகளை வந்து அடைந்தான்.
 

வீடணன் இராமனைப் பிரியாது அயோத்தி செல்லும் எண்ணம்
உடையவனாய் இருந்தான் என்பது இதனால் விளங்கும். 
 

(10)
 

வீடணற்கு இராமன் நீதி கூறல்
  

9962.

குரக்கு வீரன், அரசு, இளங் கோளரி, 

அரக்கர் கோமகனோடு அடி தாழ்தலும், 

பொருக்கெனப் புகல் புக்கவற் புல்லி, அத் 

திருக் கொள் மார்பன் இனையன செப்பினான்:* 

 

அரக்கர் கோமகனோடு- அரக்கர்க்கு அரசன் ஆகிய
வீடணனோடு; குரக்கு வீரன் - வானர வீரன் என்று சிறப்பித்து
உரைக்கப்படும்  அனுமன்;  அரசு-  வானர   வேந்தனாகிய
சுக்கிரீவன்;  இளங்கோளரி-  வானர  இளவரசாகிய  சிங்கம்
போன்ற   அங்கதன்   (ஆகியோர்)   அடி   தாழ்தலும்
(இராமபிரானது அடிகளில் வணங்குதலும்; அத்திருக்கொள்
மார்பன் புகல் புக்கவன்
- அந்த இராமன் (தன்னிடத்தில்)
அடைக்கலம் புகுந்தவனாகிய வீடணனைப்; பொருக்கென-
விரைவாக; புல்லி- எடுத்துத் தழுவி;இனையன செப்பினான் -
இத்தகைய நீதிகளை எடுத்துரைத்தான்.
 

அனுமன், சுக்கிரீவன், அங்கதன் முதலானோர் வீடணனது
பட்டாபிஷேகத்துக்கு இலக்குவனுடன் சென்றோர். 
 

(11)
 

9963.

'உரிமை மூஉலகும் தொழ, உம்பர்தம் 

பெருமை நீதி அறன் வழிப் பேர்கிலாது, 

இருமை ஏய் அரசாளுதி, ஈறு இலாத் 

தரும சீல!' என்றான் - மறை தந்துளான்.* 

 

மறை தந்துளான் - நான்கு வேதங்களையும் வெளியிட்டருளிய
இராமபிரான்; ஈறு இலாத் தருமசீல!- முடிவில்லாத அற