பக்கம் எண் :

426யுத்த காண்டம் 

ஒழுக்கத்தில் என்றும் நிலைத்து நிற்பவனே!;  மூ  உலகும் தொழ
- மூன்று உலகத்தில் உள்ளாரும்  உன்னை  மதித்து  வணங்குமாறு;
உம்பர் தம் பெருமை- தேவர்களுடைய   பெருமைக்கும்;  நீதி-
அரச  நீதிக்கும்; அறன்  வழி- தரும வழிக்கும்;  பேர்கிலாது
-  (சிறிதும்)  மாறுபடாமல்;   இருமை  ஏய்  உரிமை   அரசு-
இம்மைக்குப் புகழும் மறுமைக்குப் புண்ணியமும்   தரத்தக்கதாக
உனக்கு உரிமையான இலங்கை அரசை; ஆளுதி- ஆள்வாயாக
என்றான்.
 

வேள்வி முதலியவற்றால்  தேவர்களை  நிறைவு  செய்தல் அரசர்
கடனாதலின  'உம்பர்தம்   பெருமை'க்கு ஒப்ப   அரசு  ஆளுதி
என்றான். இராவணன்  தேவர் சீற்றத்துக்கு ஆளாயினமை   அறிக.
வீடணன் சிரஞ்சீவியாதலின் 'ஈறிலா' என்னும் அடைமொழி
பொருந்தியது. 
 

(12)
 

9964.

பன்னும் நீதிகள் பல பல கூறி, 'மற்று 

உன்னுடைத் தமரோடு, உயர் கீர்த்தியோய்! 

மன்னி வாழ்க! என்று உரைத்து, அடல் மாருதி - 

தன்னை நோக்கினன், தாயர் சொல் நோக்கினான்.* 

 

தாயர் சொல்  நோக்கினான்-  தனது  சிற்றன்னையாகிய
கைகேயியின் சொல்லை மனத்தின்கண் எப்பொழுதும் நினைத்துக்
காத்தவனாகிய இராமபிரான்; பன்னும்  நீதிகள்  பல்பல கூறி-
திரும்பத் திரும்ப எடுத்துரைக்கப்படும் அறவுரைகள் பற்பலவற்றை
(வீடணனுக்குச்) சொல்லி;  உயர்கீர்த்தியோய் - மிக்க  புகழை
உடைய வீடணனே!  மற்று   உன்னுடைத்   தமரோடு- உன்
இனத்தவர்களோடு;  மன்னி  வாழ்க-  நிலைபெற்று   வாழ்க;
என்று உரைத்து- என்று சொல்லி; அடல் மாருதி தன்னை
நோக்கினன்
- வலிமை படைத்த அனுமனை (ஒன்று 
சொல்லுதற்காக)ப் பார்த்தான்.
 

முதலில் நோக்கினான் என்பது மனத்தால் நோக்குதல்.
மாருதியை நோக்கல் கண்ணால் நோக்குதலாம். 
 

(13)
 

இராமன் அனுமனைச் சீதையிடம் அனுப்பல்
 

9965.

இப் புறத்து, இன எய்துறு காலையில், 

அப் புறத்ததை உன்னி, அனுமனை 

'துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால் 

செப்புறு, இப்படிப் போய்' எனச் செப்பினான்.