இப்புறத்து- இவ்விடத்தில்; இன- இந்நிகழ்ச்சிகள்; எய்துறு காலையில்- நடக்கும் பொழுது; அப்புறத்ததை உன்னி- மேல் நடக்க வேண்டியவைகளை (இராமன்) மனத்தில் கருதி; அனுமனை - அனுமனை அழைத்து; துப்பு உறச் செய்ய வாய் மணித் தோகைபால் போய் - பவழத்தை ஒத்துச் சிவந்த வாயை உடைய அழகிய மயில்போல்வாளாகிய சீதையிடம் சென்று; இப்படி செப்புறு- இங்கு நடந்த செய்திகளைச் சொல்வாயாக; எனச் செப்பினான்- என்று கூறினான். |
இப்படி - இத்தன்மைகள் என்றாகும். இங்கு நடந்த தன்மைகள். அவை இராவணவதமும் வீபீடண பட்டாபிஷேகமும் சிறை மீட்சியும் ஆகும். 'துப்பு உறச் செய்ய வாய்' என்பது பவழத்தைச் சிவப்புறச் செய்யும் சிவந்த வாய் என்றுமாம். |
(14) |
அனுமன் சீதையிடம் கூறுதல் |
9966. | வணங்கி, அந்தம் இல் மாருதி, மா மலர் |
| அணங்கு சேர் கடி காவு சென்று அண்மினான்: |
| உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என, |
| சுணங்கு நோய் முலையாட்கு இவை சொல்லுவான்: |
|
அந்தம் இல் மாருதி- அழிவற்ற சிரஞ்சீவியாகிய அனுமன்; வணங்கி- (இராமனை) வணங்கி விடைபெற்றுச் சென்று; மாமலர் அணங்கு சேர் கடிகாவு சென்று அண்மினான் - சிறந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளாகிய சீதாபிராட்டி தங்கியுள்ள காப்பமைந்த அசோக வனத்தை நெருங்கிச் சென்று அடைந்து; சுணங்கு நோய் முலையாட்கு- தேமல் பரவிய நகில்களை உடைய பிராட்டிக்கு; உணங்கு கொம்புக்கு உயிர் வரு நீர் என- காய்ந்து போன கிளைக்கு உயிர் வருதற்குக் காரணமான நீரைப் போல; இவை- (பிராட்டிதளிர்த்தற்குக் காரணமான) இந்தச் செய்திகளைச்; சொல்லுவான் - சொல்லத் தொடங்கினான். |
''என்றும் ஓர் துளி வரக் காணா நன் மருந்து போல் நலன் அற உணங்கிய நங்கை''யைத் தளிர்க்கச் செய்தலின் அனுமன் கூறிய செய்திகள் நீர் எனப் பெற்றன; அனுமனும் சிரஞ்சீவி ஆதலின் ''அந்தம் இல் மாருதி'' எனப்பட்டான். |
(15) |
9967. | 'ஏழை சோபனம்! ஏந்திழை, சோபனம்! |
| வாழி, சோபனம்! மங்கல சோபனம்! |