தாரணி தாங்கிய மலை கிடந்தன போல்- பூமியைத் தாங்குகிற மலைகள் கீழே விழுந்து கிடந்தன போல; தலை கிடந்தன - (இராவணனது) பத்துத் தலைகள் கீழே கிடந்தன; மணித் தோள் எனும் - அழகிய தோள்கள் என்கின்ற; அலை கிடந்தன - கடல் அலைகள் கிடந்தன;உடல்- இராவணனது உடம்பு; நிலத்தே- பூமியின்கண்; ஆழி கிடந்தென- கடல் கிடந்தது என்று சொல்லும் படி; நிலை கிடந்தது- அசையாமல் கிடந்தது; என்றான் - என்று (அனுமன்) கூறினான். |
பத்துத் தலைகளும் மலைகள் போல் ஆயின. கடல் கிடந்தது போல் உடல் கிடந்தது. ஆகவே பக்கத்தில் உள்ள இருபது தோள்களும் கடல் அலைகள் போல் உள்ளன எனப் பெற்றது. |
(18) |
9970. | 'அண்ணல் ஆணையின், வீடணனாம் மறக் |
| கண் இலாதவன் காதல் தொடர்தலால், |
| பெண் அலாது, பிழைத்துளதாகும்' என்று |
| எண்ணல் ஆவது ஓர் பேர் இலதால்' என்றான். |
|
அண்ணல் ஆணையின்- தலைவனான இராமபிரானது; ஆணையாலும்; வீடணனாம்- வீடணன் என்று கூறப்படும்; மறக்கண் இலாதவன்- கொடுமையற்ற அறவாளனது; காதல் - அன்பு; தொடர்தலால் - இடைவிடாது இருத்தலாலும்; பெண் அலாது பிழைத்து உளதாகும் என்று எண்ணலாவது ஓர் பேர் இலது- (இலங்கையில்) பெண்மக்கள் அல்லாமல் உயிர் பிழைத்துள்ளவர் என்று நினைக்கத்தக்க ஆடவர் ஒருவர் கூட இல்லை. |
வீடணன் அன்பும் இராமன் ஆணையும் இலங்கையை அடியோடு அழித்தது. போர்க்கு வராதவர் ஆதலின் பெண்மக்கள் பிழைத்தனர். ஆல் அசை. |
(19) |
பிராட்டியின் மகிழ்ச்சி நிலை |
9971. | ஒரு கலைத் தனி ஒண் மதி நாளொடும் |
| வரு கலைக்குள் வளர்வது மானுறப் |
| பொரு கலைக் குலம் பூத்தது போன்றனள் - |
| பருகல் உற்ற அமுது பயந்த நாள். |
|
(அநுமன் கூறிய நற்செய்திகளைக் கேட்ட பிராட்டி) பருகல் உற்ற அமுது பயந்த நாள் - பருகுதற்கினிய தேவர் அமுதம் |