கடைந்தெடுத்த நாளில்; ஒரு கலைத் தனி ஒண் மதி- ஒற்றைக் கலை அளவினதாகிய சந்திரன்; வருகலைக்குள் வளர்வது மானுற- ஒவ்வொன்றாக வருகின்ற கலைகளால் தன்னுள் தானே வளர்ந்து பதினாறு கலைகளும் நிரம்பிய முழு மதியானது போல என்னும்படி; பொரு கலைக்குலம் பூத்தது போன்றனள்- நெருங்கிய கலைகளின் தொகுதி நிரம்பப் பெற்று பொலிவெய்தியதைப் போன்று தழைத்தாள். |
அமுதம் கடைந்த பொழுது சந்திரன் திருப்பாற்கடலில் தோன்றியது ஆதலின் 'அமுது பயந்த நாள்' என்றார். ஒருகலையாக முதலில் தோன்றித் தன்னுள்ளே கலைகள் வளரப் பெற்று முழுமதியானது போல பிராட்டியும் தன்னுள்ளே மகிழ்ச்சியால் பூத்துப் பொலிவெய்தினாளாம். |
(20) |
9972. | ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட, |
| தேம்பும் நுண் இடை நோவ, திரள் முலை |
| ஏம்பல் ஆசைக்கு இரட்டி வந்து எய்தினாள் - |
| பாம்பு கான்ற பனி மதிப் பான்மையாள். |
|
பாம்பு கான்ற பனிமதிப் பான்மையாள் - இராகுவால் (விழுங்கிக்) கக்கப் பெற்ற குளிர்ந்த நிலவைப் போன்ற தன்மை உடைய பிராட்டி (அநுமன் சொல்லால்); ஆம்பல் வாயும் முகமும் அலர்ந்திட- ஆம்பல் மலரை ஒத்த சிவந்த வாயும் முகமும் மேலும் ஒளி விளங்க; தேம்பும் நுண் இடை நோவ- முன்பே தேய்ந்து வருந்தும் சிறிய இடையானது மேலும் வருந்தும்படி; திரள் முலை- திரண்டுருண்ட நகில் தடங்கள்; ஏம்பல் ஆசைக்கு- மகிழ்ச்சி மேலெழும் ஆசையால்; இரட்டி வந்து எய்தினாள் - (முன்பிருந்ததை விட) இரண்டு மடங்கு வளர்ந்து பொருந்தப் பெற்றாள். |
'ஆசையால்' என்னும் மூன்றாவதன்கண் 'ஆசைக்கு' என நான்காவது வந்தது. உருபு மயக்கம். |
(21) |
9973. | புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ, |
| உந்தி ஓங்கும் ஒளி வளைத் தோள்கொலோ, |
| சிந்தி ஓடு கலையுடைத் தேர்கொலோ - |
| முந்தி ஓங்கின யாவை - முலைகொலோ? |
|
முந்தி ஓங்கின- (பிராட்டியிடத்தில்) முற்பட்டு வளர்ந்தவை; புந்தி ஓங்கும் உவகைப் பொருமலோ- மனத்திற்குள் உண்டாகும் |