பக்கம் எண் :

 மீட்சிப் படலம்431

மகிழ்ச்சிப் பூரிப்போ;  உந்தி  ஓங்கும்  ஒளி  வளைத்
தோள்கொலோ
-   தள்ளப்பட்டு   மேல்  எழும்புகின்ற
ஒளிபொருந்திய வளையலை அணிந்த தோள்களா?; சிந்தி
ஒடு கலை  உடைத் தேர்கொலோ
-  அவிழ்ந்து விலகி
விடுகின்ற  ஆடையை   அணிந்துள்ள   தேர்   போன்ற
அல்குல் தடமா?; முலைகொலோ- தனங்களா?
 

இது கவிக்கூற்று. பிராட்டியிடம் தோன்றிய மகிழச்சி
மிகுதியைக் கவிஞர் இவ்வாறு கூறினார். 
 

(22)
 

9974.

குனித்த, கோலப் புருவங்கள்; கொம்மை வேர் 

பனித்த, கொங்கை; மழலைப் பணிமொழி 

நுனித்தது ஒன்று, நுவல்வது ஒன்று, ஆயினாள்;- 

கனித்த இன் களி கள்ளினின் காட்டுமோ? 

 

கோலப்   புருவங்கள்   குறித்த-   அழகிய   புருவங்கள்
வளைந்துள்ளன;கொங்கை கொம்மை வேர் பனித்த - முலைகள்
திரண்டு வியர்வை அரும்பப் பெற்றன;   மழலைப்   பணிமொழி-
மழலையான இன்சொற்களைப் பேசுமவளாகிய பிராட்டி (இப்போது);
நுனித்தது ஒன்று நுவல்வது ஒன்று  ஆயினாள்- தான் மனதில்
கருதியது ஒன்றும் சொல்லுவது ஒன்றும் ஆகப் பெற்றாள்; கனித்த
இன்களி
- முற்றிய இனிய மகிழ்ச்சியானது; கள்ளினின் காட்டுமோ-
கள்ளுண்டார்க்கு நிகழும் மெய்ப்பாடுகளைத் தோற்றுவிக்குமோ.
 

இதுவும்  கவிக்கூற்று.  புருவம் வளைதல், வியர்வை  அரும்பல்,
பேச்சு  குழறல்.  இவை  கள்ளுண்டார்  பால்  நிகழ்வன;  மகிழ்ச்சி
மிகுதியடைந்த பிராட்டியின் பாலும் இவை நிகழவே இவ்வாறு கூறினார். 
 

(23)
 

9975.

அனையள் ஆகி, அனுமனை நோக்கினாள், 

இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் 

நினைவு இலாது நெடிது இருந்தாள் - நெடு 

மனையின் மாசு துடைத்த மனத்தினாள்.

 

நெடுமனையின்  மாசு  துடைத்த  மனத்தினாள் - உயர்ந்த
இல்வாழ்க்கையின்  குற்றத்தை  அறப்போக்கிய  சீரிய  மனத்தை
உடைய பிராட்டி; அனையள் ஆகி-  மேற்சொல்லிய  மகிழ்ச்சி
விம்மிதம் உடையவளாகி; அனுமனை நோக்கினாள் - அனுமனைப்
பார்த்தாள்; இனையது இன்னது இயம்புவது என்பது ஓர் நினைவு