பக்கம் எண் :

432யுத்த காண்டம் 

இலாது நெடிது இருந்தாள்- இத்தகையதான இந்த வார்த்தையைச்
சொல்ல வேண்டும் என்கின்ற நினைவு இல்லாமல் நெடுநேரம்
சும்மா இருந்தாள்.
 

மகிழ்ச்சி மிகுதியால் பேச ஆற்றாதவளானாள். பிறந்த குடிக்கும்,
புகுந்த  குடிக்கும் புகழ்  தேடினள்  ஆதலின்   'மனையின்  மாசு
துடைத்த மனத்தினாள்' என்றார். 
 

(24)
 

9976.

''யாது இதற்கு ஒன்று இயம்புவல்?'' என்பது 

மீது உயர்ந்த உவகையின் விம்மலோ? 

தூது பொய்க்கும் என்றோ?' எனச் சொல்லினான், 

நீதி வித்தகன்; நங்கை நிகழ்த்தினாள்: 

 

நீதி வித்தகன்- நீதி வழியில்  தவறாது  நடக்கும்  திறமை
உடைய அனுமன்;  (பிராட்டி ஒன்றும் கூறாது இருந்தமை நோக்கி
இதற்குக் காரணம்) இதற்கு யாது ஒன்று இயம்புவல் என்பது-
இந்த அநுமன் வார்த்தைக்கு என்ன பதில் கூறுவேன் என்று; மீது
உயர்ந்த உவகையின் விம்மலோ
- மேல்  எழுந்த  மகிழ்ச்சிப்
பெருக்கினாலா? (அல்லது);தூது பொய்க்கும் என்றோ- (இந்த
அநுமன்) சொல்லிய செய்தி பொய்யாயிருக்கும் என்று கருதியோ?
எனச்  சொல்லினான் - என்று  சொன்னான்;  (அது கேட்ட)
நங்கை நிகழ்த்தினாள்- சீதை பின்வருமாறு சொல்லலானாள்.
 

 (25)
 

அனுமனுக்குச் சீதையின் பதில்
  

9977.

'மேக்கு நீங்கிய வெள்ள உவகையால், 

ஏக்கமுற்று, ''ஒன்று இயம்புவது யாது?'' என 

நோக்கி நோக்கி, அரிது என நொந்துளேன்: 

பாக்கியம் பெரும் பித்தும் பயக்குமோ? 

 

மேக்கு  நீங்கிய  வெள்ள  உவகையால்-  தனக்கு
மேற்பட்டதொன்றிலாத மகிழ்ச்சிப்   பெருக்கினால்; ஏக்கம்
உற்று
- (என்ன பேசுவது என்று) திகைப்படைந்து; இயம்புவது
ஒன்று  யாது யாது என நோக்கி   நோக்கி
-   சொல்லும்
வார்த்தை இதுவா இதுவா என்று  சிந்தித்துச் சிந்தித்து; அரிது
என நொந்துளேன்
- மறுமொழி கூறுதல் இயலாது என்று மனம்
வருந்தி யுள்ளேன்; பாக்கியம் பெரும்பித்தும் பயக்குமோ?-
(ஒருவர்க்கு வரும்) நற்பேறு பெரிய மனத்தடுமாற்றத்தையும்
தரவல்லதோ?