பக்கம் எண் :

 மீட்சிப் படலம்433

மகிழ்ச்சி மிகுதியால் பித்தேறினாள் என்க. 
 

(26)
 

9978.

'முன்னை, ''நீக்குவென் மொய் சிறை'' என்ற நீ, 
பின்னை நீக்கி, உவகையும் பேசினை; 
''என்ன பேற்றினை ஈகுவது?'' என்பதை 
உன்னி நோக்கி, உரை மறந்து ஓவினேன். 
 

முன்னை- (அநுமனே!) முன்பு; மொய்சிறை நீக்குவென்
என்ற நீ - நெருக்கிடும் அரக்கர் சிறையிலிருந்து உன்னை
விடுவிப்பேன்  என்று  (தூது வந்த போது)  சொல்லிய நீ;
பின்னை நீக்கி  உவகையும்  பேசினை-  இப்பொழுது
சிறையிலிருந்து  விடுவித்து மகிழ்ச்சி   மேலிட்டு   மங்கல
வார்த்தையும்  கூறினாய்; என்ன   பேற்றினை   ஈகுவது
என்பதை உன்னி நோக்கி
- (உனக்கு) என்ன பாக்கியத்தைத்
தருவது என்பதை நினைத்துப்  பார்த்து  (எதுவும் பொருந்தி
வாராமையால்); உரை மறந்து ஒவினேன் - பேச இயலாமல்
செயலற்றேன். 
 

(27)
 

9979.

'உலகம் மூன்றும் உதவற்கு ஒரு தனி 

விலை இலாமையும் உன்னினென்; மேல் அவை 

நிலை இலாமை நினைந்தனென்; நின்னை என் 

தலையினால் தொழவும் தகும் - தன்மையோய்! 

 

தன்மையோய்! - சிறந்த பண்புகளை  உடையவனே!;  உலகம்
மூன்றும் உதவற்கு ஒரு  தனி விலை  இலாமையும்
- (நீ செய்த
உதவிக்குக்  கைம்மாறாக)   முன்று   உலகங்களையும்   உதவலாம்
என்றால் அவை  அவ்வுதவிக்கு   ஒப்பற்ற ஈடாக   ஆகாமையை
அறிந்தேன்; மேல் அவை  நிலை   இலாமை   நினைந்தனன்-
அதன் மேலும் அவ்வுலகங்கள் (நீ செய்த உதவி போல்) நிலைத்த
தன்மை உடையன அல்ல என்பதை நினைந்தனன் (வேறு செய்வது
ஒன்று இன்மையால்); நின்னை என் தலையினால் தொழவும் தகும்
- உன்னை என்னுடைய தலையால் தொழுதலே செய்யத் தகுவதாகும்.
 

''தொழவே தகும்'' என்னும் பாடம் சிறப்புடையது - 'தொழவும்
தகும்' என்பதனுள் உம்மை பொருட்சிறப்பின்று ஆதலின். உலகம்
அழிந்தபின்னும் நிலைத்து நிற்கும் பேருதவிக்கு அழிந்து போகும்
'நிலையிலா உலகங்கள் ஈடாகாமை நினைந்தாள் ஆயிற்று. 
 

(28)