இவர் - இவ் வரக்கியரது; குடல் குறைத்து- குடலை வெட்டி; குருதி குடித்து- இரத்தத்தைக் குடித்து; உடல் முருக்கியிட்டு உண்குவேன் - உடலைத் துண்டாக்கி உண்பேன்; என்றலும்- என்று அனுமன் கூறிய அளவில்; அடல் அரக்கியர்- வலிமை படைத்த அரக்கிமார்கள்; அன்னை- தாயே!; நின் பாதமே மெய்ச்சரண் - நின்னுடைய திருவடிகளே எங்களுக்கு உண்மையான புகலிடம்; விடலம்- விடமாட்டோம்; என்று விளம்பலும்- என்று சொல்லுதலும். |
(33) |
9985. | அன்னை, 'அஞ்சன்மின், அஞ்சன்மின்! நீர்' எனா, |
| மன்னும் மாருதி மா முகம் நோக்கி, 'வேறு |
| என்ன தீமை இவர் இழைத்தார், அவன் |
| சொன்ன சொல்லினது அல்லது? - தூய்மையோய்!* |
|
அன்னை- தாயாகிய பிராட்டி; நீர் அஞ்சன்மின் அஞ்சன்மின் எனா- (அரக்கியர்களைப் பார்த்து) நீங்கள் பயப்படாதீர்கள் என்று சொல்லி; மன்னும் மாருதி மாமுகம் நோக்கி- நிலைபெற்ற அனுமனது சீரிய முகத்தைப் பார்த்து; தூய்மையோய்- பரிசுத்தமானவனே; இவர் - இவ் வரக்கியர்; அவன் சொன்ன சொல்லினது அல்லது- அந்த இராவணன் ஏவிய சொற்களைச் சொன்னது அல்லாமல்; என்ன தீமை இழைத்தார் - (தாமாக) என்ன தீமையை எனக்குச செய்தார்கள்? (என்று கேட்டாள்) |
(34) |
9986. | 'யான் இழைத்த வினையினின் இவ் இடர் - |
| தான் அடுத்தது, தாயினும் அன்பினோய்! |
| கூனியின் கொடியார் அலரே, இவர்! |
| போன அப் பொருள் போற்றலை, புந்தியோய்!* |
|
தாயினும் அன்பினோய்- தாயைக் காட்டிலும் என்பால் அன்புடையவனே!; புந்தியோய்- அறிவாற்றலிற் சிறந்தவனே!; இவ் இடர்தான் யான் இழைத்த வினையினின் தான் அடுத்தது- இச் சிறைத்துன்பம் யான் செய்த தீவினை காரணமாக எனக்கு வந்து சேர்ந்தது; இவர்- இவ் வரக்கியர்; கூனியின் கொடியார் அலரே- கூனியை விடக் கொடியவர்கள அல்லர் அல்லவா; போன அப்பொருள் போற்றலை- நடந்து முடிந்த அந்நிகழ்ச்சிகளை மனத்திற் கொள்ளாதே (என்றான்.) |