பக்கம் எண் :

 மீட்சிப் படலம்437

தானே திட்டமிட்டுச் செய்தவள் கூனி. அவளையே வாழ
விட்டுள்ளபோது இராவணன் சொன்னதைச் செய்த இவர்கள் மேல்
கோபிக்கலாகுமோ என்றாளாம். 
 

(35)
 

9987.

'எனக்கு நீ அருள், இவ் வரம்; தீவினை 

தனக்கு வாழ்விடம் ஆய சழக்கியர் 

மனக்கு நோய் செயல்!' என்றனள் - மா மதி 

தனக்கு மா மறுத் தந்த முகத்தினாள். * 

 

மாமதி தனக்கு மாமறு தந்த முகத்தினாள் - சிறந்த
சந்திரனுக்கு பெரிய  களங்கத்தைக்  கொடுத்து கீழப்படுத்திய
முகம் உடையவளாகிய சீதை (அனுமனைப் பார்த்து);நீ எனக்கு
இவ்வரம் அருள்
- நீ   எனக்கு  இந்த   வரத்தைத் தருதல்
வேண்டும்; தீ வினை தனக்கு வாழ்விடம் ஆய அழக்கியர்
மனக்கு நோய் செயல் என்றனள்
- கொடு வினைகளுக்குத்
தங்குமிடமாகிய  கொடிய  இவ்வரக்கியர்களது  மனத்துக்குத்
துன்பம் செய்யாதே  என்று  கேட்டுக்   கொண்டாள்.
 

மனத்துக்கு - மனக்கு; அத்துக் கெட்டது - வரம்பு கெட்ட
மனம் உடைய அரக்கியர் என்பதை உணர்த்த அத்துக் கெட்டது
எனலும் ஆம். 
 

(36)
 

இராமன் வீடணனைச் சீதையை அழைத்து வருக எனல்
  

9988.

என்ற போதின், இறைஞ்சினன், 'எம்பிரான் 

தன் துணைப் பெருந் தேவி தயா' எனா 

நின்ற காலை, நெடியவன், 'வீடண! 

சென்று தா, நம தேவியை, சீரொடும்.* 

 

என்ற போதின்- என்று பிராட்டி கூறிய அளவில் (அனுமன்);
'எம்பிரான்  தன்   துணைப்  பெருந்தேவி   தயா' எனா-
இராமபிரானது   ஒப்பற்ற   பெருந்தேவியாகிய   பிராட்டியின்
ஒப்பற்ற  கருணை  (இருந்தவாறு  என்னே)  என்று  சொல்லி;
இறைஞ்சினன் நின்ற  காலை-  வணங்கி  நின்ற  பொழுது;
நெடியவன்- (அங்கே) இராமபிரான்; வீடண! - வீடணனே!; நம்
தேவியை
- நம்முடைய பிராட்டியை; சென்று சீரொடும்தா-
சென்று  சிறப்போடும்  அழைத்து வருக; 
 

(37)