பக்கம் எண் :

438யுத்த காண்டம் 

9989.

என்னும் காலை, இருளும் வெயிலும் கார் 

மின்னும் காலை இயற்கைய வீடணன் 

'உன்னும் காலைக் கொணர்தி' என்று ஓத, அப் 

பொன்னின் கால் தளிர் சூடினன், போந்துளான். 

 

என்னும் காலை- என்று இராமன் கட்டளையிட்ட போது;இருளும்
வெயிலும்
- உடம்பால் காரிருளும், அணிகலன்களால் பகல்  ஒளியும் 
உடையனாய்; கார் மின்னும் காலை இயற்கைய வீடணன் - மேகம் 
மின்னும்  பொழுதுண்டாம்  தன்மை  படைத்த  வீடணன்; உன்னும் 
காலைக் கொணர்தி என்று ஓத
- நினைக்குமாத்திரத்தே அழைத்துக் 
கொண்டு வருக  என்று இராமன்  சொல்ல; போந்துளான் -  உடனே 
அசோக வனத்துக்கு வந்து  சேர்ந்து; அப்பொன்னின்  கால் தளிர் 
துடினன்
-  அந்த  சீதாப்   பிராட்டியின்   திருவடித்   துளிர்களைத் 
தலைமேற் சூடி வணங்கினான். 
 

(38)
 

வீடணன் பிராட்டியிடம் கூறல்
  

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

9990.

'வேண்டிற்று முடிந்தது அன்றே; வேதியர் தேவன் 

நின்னைக

காண்டற்கு விரும்புகின்றான்; உம்பரும் காண 

வந்தார்;

''பூண் தக்க கோலம் வல்லை புனைந்தனை, வருத்தம் 

போக்கி,

ஈண்டக் கொண்டு அணைதி'' என்றான்; எழுந்தருள், 

இறைவி!' என்றான்.

 

இறைவி- தலைவியே! வேண்டிற்று  முடிந்தது  அன்றே-  நீ
விரும்பியது  நிறைவேறி  விட்டது  அல்லவா;  வேதியர்  தேவன்
நின்னைக் காண்டற்கு விரும்புகின்றான்
 - வேத பாரகர்களாகிய
முனிவர்களின்    வழிபடுகடவுளாகிய    இராமபிரான்    உன்னைக்
காண்பதற்கு மிகவும் ஆசைப்படுகின்றான்; உம்பரும் காண வந்தார்
- (நீங்கள்  இருவரும்  ஒன்று  சேரும்  காட்சியைத்)   தேவர்களும்
காண்பதற்குக்  குழுமியுள்ளார்கள்;  பூண்தக்க  கோலம்  வல்லை
புனைந்தனை
- அணிதற்குத் தகுதியான அலங்காரங்களை