வெகுளி பெற்றுடையார்- உலர்ந்த மரங்கள் நெருங்கிய காட்டில் பற்றிய தீப்போல் பெருங்கோபம் கொண்டவர்கள். |
இலவ மரங்கள் நிறைந்த தீவாகலின் 'இலவத்தீவு' எனப்பட்டது. இமையாப்புலவர் - கண்ணிமைத்தலில்லாத தேவர்கள். பொன்னகர் - பொன்னமராவதி. குற்றம் செய்து சாபம் பெற்ற சந்திரனையே முடிமிசை வைத்த அருளாளன் முக்கட் பெருமான் ஆகலின் தீமையே புரியினும் அவர்தம் தவத்திற்காக வரம் நல்கினான் என்பதாம். உலவை - உலவை மரம். காட்டுத்தீ விரைந்து பரவுந் தன்மையது. அதுவும் உலர்ந்த மரங்கள் நெருங்கிய காடெனில் பெருந்தீக்கதுமென பரவுமன்றோ? அத்தகைய கடுங்கோபத்தினர் இவர்கள் என்றவாறு. |
(12) |
9259. | 'அன்றில் தீவினின் உறைபவர், இவர்; பண்டை |
| அமரர்க்கு |
| என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட மேருக் |
| குன்றைக் கொண்டு போய், குரை கடல் இட, அறக் |
| குலைந்தோர் |
| சென்று, 'இத் தன்மையைத் தவிரும்' என்று |
| இரந்திடத் தீர்ந்தோர். |
|
இவர் அன்றில் தீவினின் உறைபவர்- இவர்கள் அன்றில் தீவில் வாழ்பவர்கள்; அமரர்க்கு என்றைக்கும் இருந்து உறைவிடம் என்றிட- தேவர்கட்கு எக்காலத்தும் இருந்து வாழ்கின்ற இடம் இது என்று பிறர் கூறிய அளவில்; மேருக்குன்றைக் கொண்டு போய் பண்டைக் குரைகடல் இட- அம்மேருமலையினைப் பெயர்த்துக் கொண்டு போய்ப் பண்டைக்காலத்தில் ஒலிக்கின்ற கடலில் இட முயலாநிற்க; அறக்குலைந்தோர் சென்று- மிகவும் நிலை குலைந்தவர்களாகிய அத்தேவர்கள் சென்று; இத்தன்மையைத் தவிரும் என்று இரந்திடத் தீர்ந்தோர்- 'இந்தச் செயலைக் கைவிடுங்கள்' என்று இரந்து கேட்டுக்கொள்ள அச்செயலை விடுத்த வீரமுடையவர்கள். |
அன்றில் தீவு - அன்றில் பறவைகள் நிறைந்த தீவாகலின் இப்பெயர் பெற்றது. இதனைக் கிரௌஞ்சம் என்பர் வடமொழியாளர். அறக்குலைதல் - மிகவும் நிலை குலைதல். |
(13) |
9260. | 'பவளக் குன்றினின் உறைபவர்; வெள்ளி பண்பு |
| அழிந்து, ஓர் |
| குவளைக் கண்ணி, அங்கு, இராக்கதக் கன்னியைக் |
| கூட, |