பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்45

அவளின் தோன்றினர், ஐ-இரு கோடியர்; நொய்தின் 

திவளப் பாற்கடல் வறள்படத் தேக்கினர், சில நாள். 

 

பவளக் குன்றினின் உறைபவர் -    (இவர்கள்) பவளக்
குன்றினில் வாழ்பவர்கள்;   வெள்ளி   பண்பு  அழிந்து ஓர்
குவளைக் கண்ணி
- சுக்கிரன் குணங்கெட்டு (க்காமுகனாகி) ஒரு
குவளை மலர் போன்ற கண்களை உடையவளான;    இராக்கதக்
கன்னியை   அங்கு   கூட
-   அரக்கர்    குலக்கன்னிகையை
அவ்விடத்துப் புணர; அவளின் தோன்றினர் ஐ- இரு கோடியர்
-    அவளிடத்துத்   தோன்றியவர்   பத்துக்கோடி    என்னும்
தொகையினராவர்;   திவளப்   பாற்கடல் வறள்பட நொய்தின்
சிலநாள் தேக்கினர்
- வெண்ணிறமுடைய பாற்கடல் வற்றுமாறு
எளிதாக சில நாட்களில் பருகினவர்கள்.
 

பவளம் நிறைந்த தீவு பவளக்குன்று எனப்பட்டது வெள்ளி -
அசுர குருவாகிய சுக்கிரன். 
 

(14)
 

9261.

'கந்தமாதனம் என்பது, இக் கருங் கடற்கு அப் பால் 

மந்தமாருதம் ஊர்வது ஓர் கிரி; அதில் வாழ்வோர், 

அந்த காலத்து அவ் ஆலகாலத்துடன் பிறந்தோர்; 

இந்த வாள் எயிற்று அரக்கர் எண் 

இறந்தவர் - இறைவ!

 

இறைவ! இந்த வாள் எயிற்று அரக்கர்- அரசே! இந்த வாள்
போன்ற கோரைப் பல்லினை உடைய அரக்கர்கள்; இக்கருங்கடற்கு 
அப்பால்   மந்த   மாருதம் ஊர்வது
- இந்தக் கரிய கடலுக்கு 
அப்புறத்தே தென்றல் தவழ்கின்ற; கந்த மாதனம் என்பது ஓர் கிரி 
அதில் வாழ்வோர்
- கந்த மாதனம் என்பதோர் மலை, அம்மலையில் 
வாழ்பவராவார்; அந்த காலத்து   அவ்ஆல   காலத்துடன் பிறந்தோர்
எண்ணிறந்தவர் -   (பாற்கடல்   கடையப்   பெற்ற) அந்தக் காலத்து 
ஆலகாலத்தோடு   உடன்   பிறந்தவர்   என்று   சொல்லத் தக்கவர் 
எண்ணிக்கை இல்லாதவர். 
 

(15)
 

9262.

'மலயம் என்பது பொதிய மாமலை; அதில் மறவோர் 

நிலயம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும்;