| ''குலையும் இவ் உலகு'' எனக் கொண்டு, நான்முகன் |
| கூறி, |
| ''உலைவிலீர்! இதில் உறையும்'' என்று இரந்திட, |
| உறைந்தார். |
|
மலையம் என்பது பொதியமாமலை - மலையம் என்பது பொதிய மாமலையாகும்; அதில் மறவோர் நிலையம் அன்னது சாகரத் தீவிடை நிற்கும் - அதில் பிறந்த வீரராகிய இவர் இருப்பிடம் கடலில் உள்ள தீவில் இருக்கின்றது; 'இவ்உலகு குலையும்' எனக் கொண்டு - (இவர்கள் இங்கிருந்தால்) இந்த உலகமே அழியும்' என்று நினைந்து; உலைவிலீர்! இதில் உறையும் என்று நான்முகன் கூறி இரந்திட உறைந்தார் - 'அழிவில்லாதவர்களே! இதில் தங்கி இருங்கள்' என்று கூறிப் பிரமன் இரந்து வேண்டியதனால் அத்தீவில் தங்கி இருந்தனர். |
(16) |
9263. | 'முக்கரக் கையர்; மூ இலை வேலினர்; முசுண்டி |
| சக்கரத்தினர்; சாபத்தர்; இந்திரன் தலைவர்; |
| நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்; |
| புக்கரப் பெருந் தீவிடை உறைபவர் - புகழோய்! |
|
புகழோய்! முக்கரக் கையர் மூஇலை வேலினர் - புகழினோய் (இவர்கள்) மூன்று கைகளை உடையவர்கள் (அவற்றில்) மூன்று இலைகளை உடைய வேலினை உடையவர்கள்; முசுண்டி சக்கரத்தினர்; சாபத்தர்; இந்திரன் தலைவர்- முசுண்டி என்னும் ஆயுதத்துடன் சக்கரத்தை உடையவர்கள், வில்லை ஏந்தியவர்கள், இந்திரனுக்கும் மேலான தகுதி உடையவர்கள்; நக்கரக் கடல் நால் ஒரு மூன்றுக்கும் நாதர்- முதலைகள் வாழுகின்ற ஏழு கடல்களுக்கும் இறைமை பூண்டவர்கள்; புக்கரப் பெருந்தீவிடை உறைபவர்- (இத்தகைய சிறப்பினரான இவர்கள்) புட்கரம் என்னும் பெரும் தீவிடை வாழ்பவராவர். |
கரக்கை - மீமிசைச்சொல். முசுண்டி - ஒருவகை ஆயுதம். சாபம் - வில். நக்கரம் - முதலை 'புட்கரம்' என்ற சொல் எதுகை நோக்கி 'புக்கரம்' என நின்றது. |
(17) |
9264. | 'மறலியை, பண்டு, தம் பெருந் தாய் சொல, வலியால், |
| புற நிலைப் பெருஞ் சக்கர மால் வரைப் பொருப்பின், |