| விறல் கெடச் சிறையிட்டு, அயன் இரந்திட, விட்டோர்; |
| இறலி அப் பெருந் தீவிடை உறைபவர் - இவர்கள். |
|
இவர்கள் இறலி அப்பெருந் தீவிடை உறைபவர்- இவர்கள் இறலி என்கின்ற அந்தப் பெரிய தீவில் வாழ்பவர்கள்; பண்டு பெருந்தாய் சொல தம் வலியால் மறலியை- முன்பு (தம்) பெருமையுடைய தாய் சொல்லத்தமது வலிமையினால் எமனை; புறநிலைப் பெருஞ்சக்கர மால்வரைப் பொருப்பின்- (ஏழுலகங்கட்கும்) புறத்தே நிலைத்துள்ள பெரிய சக்கரவாளம் என்கின்ற பெரிய மலையில்; விறல் கெடச் சிறையிட்டு அயன் இரந்திட விட்டோர்- அவனுடைய வலிமை கெட வென்று சிறைவைத்துப் பின்பு பிரமன் இரந்து வேண்டியதால் அவனை விடுத்தவர்கள்; |
இறலி - இத்தி என்றும் மருதமரம் என்றும் கூறுவர். சக்கரவாளகிரி மணி. 6. 355 உரைக்குறிப்புக் காண்க. |
(18) |
9265. | 'வேதாளக் கரத்து இவர், ''பண்டு புவியிடம் விரிவு |
| போதாது உம்தமக்கு; எழு வகையாய் நின்ற புவனம், |
| பாதாளத்து உறைவீர்'' என, நான்முகன் பணிப்ப, |
| நாதா! புக்கு இருந்து, உனக்கு அன்பினால், இவண் |
| நடந்தார். |
|
நாதா! வேதாளக் கரத்து இவர்- தலைவனே! வேதாளத்தின் கையைப் போன்ற கையை உடைய இவர்கள்; நான்முகன் 'பண்டு உம் தமக்கு புவியிடம் விரிவு போதாது - நான்முகனாகிய பிரமன் முற்காலத்து, ''உமக்கு இந்நிலவுலகத்தின் பரப்பு விரிவு போதாது ஆதலால்; எழுவகையாய் நின்ற புவனம் பாதாளத்து உறைவீர் எனப் பணிப்ப- ஏழு வகையாக நின்ற புவனங்களில் பாதாளத்தில் தங்குவீர்களாக'' எனக் கட்டளை இட; புக்கு இருந்து, உனக்கு அன்பினால் இவன் நடந்தார்- அங்கு சென்று வாழ்ந்திருந்து உன்பால் கொண்ட அன்பால் இங்கு வந்தவர்களாவர். |
வேதாளம் - பேய் எனினுமாம். ''வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே'' (நல்வழி - 23) |
(19) |
9266. | 'நிருதி தன் குலப் புதல்வர்; நின் குலத்துக்கு நேர்வர்; |
| ''பருதி தேவர்கட்கு'' எனத் தக்க பண்பினர்; பானக் |