இந்திரனை வென்றமைக்கு அறிகுறியாக திசையானைகளை விலக்கித் தமது யானைகளை அவ்விடத்தில் நிறுத்தினர் என்பது கருத்து. ஒன்றார் இகல் அற நூறித்தன் மதவாரணந், திசைதொறு நிறுவிய - சீயகங்கன்'' என்றதும் காண்க. |
(21) |
| 9268. | 'மறக் கண் வெஞ் சின மலை என இந் நின்ற |
| வயவர், |
| இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற |
| இகலோர்; |
| அறக் கண் துஞ்சிலன், ஆயிரம் பணந் தலை |
| அனந்தன், |
| உறக்கம் தீர்ந்தனன், உறைகின்றது, இவர் தொடர்ந்து |
| ஒறுக்க. |
| |
மறக்கண் வெஞ்சின மலை என இந்நின்ற வயவர்- கொடுங் கண்ணையும் கடும் சினத்தையும் உடைய மலை போல இங்கு நின்ற வீரர்கள்; இறக்கம் கீழ் இலாப் பாதலத்து உறைகின்ற இகலோர் - (தன்னினும்) இறக்கமுடைய கீழிடம் இல்லாத, பாதலத்தில் வாழ்கின்ற வலிமையுடையோராவர்; ஆயிரம் பணந்தலை அனந்தன் அறக்கண் துஞ்சிலன் - ஆயிரம் படத்தோடு கூடிய தலைகளை உடைய ஆதிசேடன் முழுவதும் கண் துஞ்சாமல்; உறக்கம் தீர்ந்தனன். உறைகின்றது, இவர் தொடர்ந்து ஒறுக்க - உறக்கம் நீங்கினவனாய்த் தங்கி இருப்பது இவ்வீரர் அவனைத் தொடர்ந்து வருத்துதலாலேயாம். |
(22) |
| 9269. | 'காளியைப் பண்டு கண்ணுதல் காட்டியகாலை, |
| மூள முற்றிய சினக் கடுந் தீயிடை முளைத்தோர்; |
| கூளிகட்கு நல் உடன்பிறந்தார்; - பெருங் குழுவாய் |
| வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும், |
| வருவார். |
| |
பெருங்குழுவாய் வாள் இமைக்கவும், வாள் எயிறு இமைக்கவும் வருவார் - பெருங் கூட்டமாக, வாள் ஒளி வீசவும், வாள் போன்ற பற்கள் ஒளி வீசவும் வருகின்றவர்களாகிய இவர்கள்; கண்ணுதல் பண்டு காளியைக் காட்டிய காலை - நெற்றிக்கண்ணை உடைய இவன் முற்காலத்தில் காளியை வெல்ல ஊர்த்துவ தாண்டவம் செய்து காட்டிய காலத்தில்; மூள முற்றிய சினக்கடுந் தீயிடை |