வினையம் - பணிவு. நினையும் நல்வரவாவது - இராம இலக்குவரை வென்றழித்தலாம். வலியரே? என்றது நலமாக உள்ளனரோ? என வினவியவாறாம். |
(33) |
9280. | 'பெரிய திண் புயன் நீ உளை; தவ வரம் பெரிதால்; |
| உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு |
| ஒன்றோ? |
| இரியல் தேவரைக் கண்டனம்; பகை பிறிது இல்லை; |
| அரியது என் எமக்கு?' என்றனர், அவன் கருத்து |
| அறிவார். |
|
அவன் கருத்து அறிவார்- அவ்விராவணனது கருத்தை அறியும் நோக்கத்தினராய் (படைத்தலைவர் இராவணனை நோக்கி); பெரிய திண்புயன் நீ உளை தவ வரம் பெரிதால்- பெரிய வலிமையான தோள்களை உடைய தலைவன் நீ இருக்கின்றாய்; யாங்கள் தவத்தினால் பெற்றுள்ள வரமும் மிகப்பெரிது; உரிய வேண்டிய பொருள் எலாம் முடிப்பதற்கு ஒன்றோ- நமக்கு உரியனவாய் வேண்டியுள்ள காரியங்களை யெல்லாம் முடிப்பதற்கு அரிதோ? தேவரை இரியல் கண்டனம் பகை பிறிது இல்லை- தேவரைத் தோற்றோடச் செய்து விட்டோம்; வேறு பகையும் இல்லை; அரியது என் எமக்கு என்றனர் - எமக்குச் செய்தற்கரியது என் உளது என்றனர். |
உளை - முன்னிலை ஒருமை வினைமுற்று. ஒன்றோ? என்பது 'ஒரு பொருட்டோ?' என்னும் பொருளது. |
(34) |
9281. | 'மாதரார்களும் மைந்தரும் நின் மருங்கு இருந்தார் |
| பேது உறாதவர் இல்லை; நீ வருந்தினை, பெரிதும்; |
| யாது காரணம்? அருள்' என, அனையவர் |
| இசைத்தார்; |
| சீதை காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான். |
|
நின் மருங்கு இருந்தார் மாதரார்களும் மைந்தரும்- நின்பக்கத்து இருந்தவர்களாகிய பெண்டிர் பிள்ளைகளில்; பேது உறாதவர் இல்லை நீ பெரிதும் வருந்தினை- கலக்கமுறாதவர்கள் இல்லை நீ பெரிதும் வருந்திக் கொண்டிருக்கின்றாய்; யாது காரணம்? அருள்'' என அனையவர் இசைத்தார்- யாது காரணம்? அருள் செய்க' என அப்படைத் தலைவர் வினவினார்; சீதை |