பக்கம் எண் :

 படைக் காட்சிப் படலம்57

காதலின் புகுந்துள பரிசு எலாம் தெரித்தான் - (இராவணன்)
சீதை மேல் வைத்த காதலால் உண்டான தன்மைகள்
எல்லாவற்றையும் அவர்கட்குத் தெரிவித்தான். 
 

(35)
 

9282.

'கும்பகன்னனோடு இந்திரசித்தையும், குலத்தின் 

வெம்பு வெஞ் சினத்து அரக்கர்தம் குழுவையும், 

வென்றார்

அம்பினால், சிறு மனிதரே! நன்று, நம் ஆற்றல்! 

நம்ப! சேனையும் வானரமே!' என நக்கார். 

 

நம்ப- நமது தலைவனே! கும்பகர்ணனோடு இந்திரசித்தையும்;
குலத்தின் வெம்புவெஞ் சினத்து அரக்கர் தம் குழுவையும்-
நம்   குலத்தில்   பிறந்த    மனம்    வெதும்புகின்ற கொடிய
கோபத்தையுடைய அரக்கர் தம்   கூட்டத்தையும்; அம்பினால்
வென்றார் சிறு மனிதரே! சேனையும் வானரமே!
- அம்பினால்
வென்றவர்கள்   சிறிய மனிதர்களா?   அவர் சேனையும் குரங்கா?
நம் ஆற்றல் நன்று! என நக்கார் - நமது வலிமை நன்று! என்று
படைத்தலைவர்கள் சிரித்தனர். 
 

(36)
 

9283.

உலகைச் சேடன்தன் உச்சிநின்று எடுக்க அன்று, 

ஓர் ஏழ்

மலையை வேரொடும் வாங்க அன்று, அங்கையால் 

வாரி

அலைகொள் வேலையைக் குடிக்க அன்று, 

அழைத்தது; மலரோடு

இலைகள் கோதும் அக் குரங்கின்மேல் ஏவக்கொல், 

எம்மை?'

 

எம்மை அழைத்தது - (நீ) எம்மை இங்கு வரவழைத்தது; உலகைச்
சேடன்தன் உச்சி நின்று எடுக்க அன்று
- உலகத்தை ஆதிசேடனது
உச்சியினின்றும் எடுப்பதற்கு அன்று; ஓர் ஏழ் மலையை வேரொடும் 
வாங்க அன்று
- ஒப்பற்ற ஏழு குலமலை  மகளை வேரோடும் பறிக்க 
அன்று; அங்கையால்  வாரி   அலைகொள் வேலையைக் குடிக்க 
அன்று
- உள்ளங்கையால் அள்ளி   அலைகளைக்  கொண்ட கடலைக் 
குடிக்கவும்  அன்று;  மலரோடு  இலைகள் கோதும் அக்குரங்கின் 
மேல் ஏவக்கொல்?
- மலர்களோடு