பக்கம் எண் :

58யுத்த காண்டம் 

இலைகளைக் கோதித்தின்னுகின்ற அந்தச் சிறிய குரங்கின் மேல் 
ஏவுதற்குத்தானோ? 
 

(37)
 

9284.

என்ன, கை எறிந்து, இடி உரும்ஏறு என நக்கு, 

மின்னும் வாள் எயிற்று அரக்கரை அம் கையால்  

விலக்கி,

வன்னி என்பவன், புட்கரத் தீவுக்கு மன்னன், 

'அன்ன மானுடர் ஆர் வலியாவது' என்று 

அறைந்தான்.

 

என்ன, கை எறிந்து, இடி உரும் ஏறு  என நக்கு- என்று 
கூறிக் கைதட்டி இடிக்கின்ற  இடியேறு  போலச் சிரித்த; மின்னும்
வாள் எயிற்று அரக்கரை அம்கையால் விலக்கி
- மின்னுகின்ற
வெள்ளிய பல்லினையுடைய அரக்கர்களை  (அவ்வாறு சிரிக்காமல்
இருக்கும்படி)   தன்   அகங்கையால்  அமைத்து, விலக்கி விட்டு;
புட்கரத்தீவுக்கு   மன்னன்   வன்னி  என்பவன்  - புட்கரம்
என்னும்  தீவினுக்கு   அரசனாகிய   வன்னி  என்பவன்; அன்ன
மானுடர்  ஆர்?  வலி யாது?  என்று  அறைந்தான்
- அந்த
மனிதர்கள்  யார்?   அவரது   வலிமை   எத்தகையது?  என்று 
(இராவணனை நோக்கிக்) கேட்டான்.
 

மனிதர்களையும்,  குரங்குகளையும்,  அற்பமாக மதித்துச் சிரித்த 
படைத்தலைவர்களின்   ஏளன   நகையை  கையமர்த்தி  அடக்கிய 
புட்கரத்    தீவின்   மன்னனாகிய   வன்னி   கும்பகன்னனையும்  
இந்திரசித்துவையும் வென்றழித்தவர் சாதாரணவராக இருக்கமுடியாது 
என்ற  கருத்தினால்  அம்மனிதர் யார்? அவர் வலிமை யாது? என 
வினவினான் என்க.
 

(38)
 

மாலியவான் மனிதர் வலிமையை உரைத்தல்
 

9285.

மற்று அவ் வாசகம் கேட்டலும், மாலியவான் வந்து, 

'உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும், உடன் ஆம் 

கொற்ற வானரத் தலைவர்தம் தகைமையும், கூறக் 

கிற்றும், கேட்டிரால்' என்றனன், கிளத்துவான்

துணிந்தான்:

 

மற்று அவ்வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து - (வன்னி
கூறிய)   அச்சொல்லைக்   கேட்டவுடனே   மாலியவான் முன்வந்து;
உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும் - இது காறும் நடந்துள்ள