பக்கம் எண் :

 மீட்சிப் படலம்581

பொன்  அணி  புட்பகப் பொருஇல் மானமும் - பொன்னால்
அழகு பெற்ற புட்பகம் என்னும் பெயருடைய ஒப்பற்ற விமானமும்;
மன்னவர்க்கு  அரசனும்  -  அரசர்க்கரசனாகிய சக்கரவர்த்தி
இராமபிரானும்;   வந்து   தோன்றினார்   -   வந்து   அநுமன்
கண்காணத் தோன்றினர்.
 

'தோன்றினார்'   என்னும்  வினைமுற்று  'புட்பக  விமானமும்
மன்னவர்க்கு அரசனும்' என்ற இரண்டையும் தலைமைப் பொருட்கு
வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தன ஆவதோர்
முறை பற்றி இயைத்தது என்க. 
 

(305)
 

அனுமன் பரதனுக்குக் காட்டிக் கூறுதல்
 

10257.

'அண்ணலே! காண்டியால் - அலர்ந்த தாமரைக் 

கண்ணனும், வானரக் கடலும், கற்புடைப் 

பெண் அருங் கலமும், நின் பின்பு தோன்றிய 

வண்ண வில் குமரனும், வருகின்றார்களை. 

 

அண்ணலே- பரதனே!; அலர்ந்த தாமரைக் கண்ணனும் -
அன்றலர்ந்த செந்தாமரை மலர் போலும்  கண்களையுடையவனான
இராமபிரானும்; வானரக் கடலும்- வானர சேனைச் சமுத்திரமும்;
கற்புடைப் பெண் அருங்கலமும்- கற்பிற்  சிறந்த பெண்டிர்க்கு
அணிகலமாய சீதாபிராட்டியும்; நின்பின்பு தோன்றிய வண்ணவில்
குமாரனும் 
-   உனக்குப் பின்னால் பிறந்த அழகிய வில் ஏந்திய 
இலக்குவனும்; வருகின்றார்களை காண்டி- என இவர்கள் வந்து
கொண்டிருப்பவர்களைப் பார்ப்பாயாக.
 

வானரக் கடலை இடையே கூறியது, அதன் ஆர்ப்பொலி
கேளாமையால் முன்பு பரதன் இராமனது வருகையை ஐயுற்றான்
ஆதலின் என்க. ஆல் - அசை. 
 

(306)
 

10258.

'ஏழ் - இரண்டு ஆகிய உலகம் ஏறினும் 

பாழ் புறம் கிடப்பது, படி இன்றாயது, ஓர் 

சூழ் ஒளி மானத்துத் தோன்றுகின்றனன் 

ஊழியான்' என்று கொண்டு, உணர்த்தும் காலையே. 

 

ஊழியான் - யுக முடிவுக் காலத்தும் நிலை பெற்றுள்ளவனாகிய
இராமபிரான்; ஏழ் இரண்டு ஆகிய உலகம் ஏறினும்- பதினான்கு
உலகங்களிலுள்ள அத்தனையும் தன்மேல்