பக்கம் எண் :

582யுத்த காண்டம் 

ஏறினாலும்; புறம் பாழ் கிடப்பது -  புறத்தே வெற்றிடம்
உள்ள தாயிருப்பதும்; படி இன்றாயது- தனக்குச் சமானம்
இல்லாததும் ஆகிய; ஓர்   சூழ்    ஒளி    மானத்துத்
தோன்றுகின்றனன்
- ஒப்பற்ற   ஒளி  சுற்றிய விமானத்தில்
காணப்படுகின்றான்; என்று கொண்டு உணர்த்தும் காலை-
என்றிவ்வாறு (அநுமன் பரதனுக்கு) தெளிவிக்கும் சமயத்தில்;
தொடரும்.
 

ஏ. அசை. 
 

(307)
 

10259.

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் 

மின் ஒளிர் மேகம்போல் வீரன் தோன்றலும், 

அந் நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு, இராவணன், 

தென் நகர்க்கு அப் புறத்து அளவும் சென்றதால். 

 

பொன் ஒளிர் மேருவின் பொதும்பில் புக்கது ஓர் மின்
ஒளிர் மேகம் போல் வீரன்   தோன்றலும்
- பொன்மயமாக
விளங்குகின்ற மேருமலையின் குகைக்குள் நுழைந்த ஒரு மின்னல்
விளங்கும் கருமேகம் போல இராமபிரான்   காணப்பட்ட உடனே;
அந்நகர் ஆர்த்த பேர் ஆர்ப்பு - அந்த    அயோத்தி நகரம்
ஆரவாரித்த பேரோசை; இராவணன் தென் நகர்க்கு அப்புறத்து
அளவும்   சென்றது
 -  இராவணனது தெற்கே உள்ள  இலங்கை
நகருக்கு அப்பாலும் சென்று ஒலித்தது.
 

ஆல் அசை. 
 

(308)
 

பரதன் இராமனைக் காணல்
 

10260.

ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய 

வானுடைத் தந்தையார் வரவு கண்டென, 

கானிடைப் போகிய கமலக்கண்ணனை, 

தானுடை உயிரினை, தம்பி நோக்கினான். 

 

கானிடைப் போகிய கமலக் கண்ணனை - காட்டிற்குச் சென்ற
தாமரை மலர்  போன்ற  கண்களை  உடைய  இராமனை;  தானுடை
உயிரினை
- தன்னுடைய  உயிராக  உள்ளவனை;  தம்பி -  அவன்
தம்பியாகிய பரதன்; ஊனுடை யாக்கை விட்டு உண்மை வேண்டிய
வானுடைத் தந்தையார் வரவு கண்டென நோக்கினான்
  -  ஊன்
பொதிந்த உடம்பைப் போகவிட்டு சத்தியத்தை விரும்பி