பக்கம் எண் :

 மீட்சிப் படலம்583

வானுலகு சென்ற தசரத சக்கரவர்த்தியாகிய தன் தந்தையார்
திரும்பி வருவது கண்டாற் போலப் பார்த்தான்.
 

''வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்''
(கம்ப. 4018) என்றதனை ஈண்டுக் கருதுக. முன்னர் 'இறந்தனன்
தாதையை எதிர்கண் டென்னவே'' (கம்ப. 2427) என்று பரதன்
இராமனைச் சந்தித்தது பற்றிக் கூறியதும் நினைக்கத்தகும். 
 

(309)
 

10261.

கெட்ட வான் பொருள் வந்து கிடைப்ப, முன்பு தாம் 

பட்ட வான் படர் ஒழிந்தவரின் பையுள் நோய் 

சுட்டவன், மானவன் - தொழுதல் உன்னியே, 

விட்டனன் மாருதி கரத்தை, மேன்மையான். 

 

மேன்மையான் - சிறந்த குணங்களுக்கு இருப்பிடமானவனாகிய
பரதன்; முன்பு தாம் பட்ட  வான்படர் -  ஒருவர்  தாம்  முன்பு
அடைந்த மிகப் பெரிய  துன்பம்; கெட்டவான்  பொருள்  வந்து
கிடைப்ப
-  தொலைத்து   விட்ட   சிறந்த   பொருள்   மீண்டும்
கிடைத்துவிட அதனால்;  ஒழிந்தவரின்  -  நீங்கப்   பெற்றவரைப் 
போல;   பையுள்   நோய்   சுட்டவன்   -  துன்ப   நோயைத் 
தொலைத்தவனாய்; மானவன் தொழுதல் உன்னி   -   இராமனை
வணங்கக் கருதி; மாருதி  கரத்தை   விட்டனன்   -   இதுவரை
பிடித்திருந்த அனுமனது கைகளை இப்போது பிடி நெகிழ  விட்டான்.
 

பரதன்   அநுமன்   கையைப்   பற்றி   வந்ததாக  வான்மீகம்
கூறவில்லை. கம்பரது கற்பனை இது. துன்பத்திற்குத் துணையாவாரைப்
பற்றி வருதல் உலகியல்பு ஆதலின். 
 

(310)
 

10262.

அக் கணத்து அனுமனும் அவண் நின்று ஏகி, அத் 

திக்குறு மானத்தைச் செல்வன் எய்தி, அச் 

சக்கரத்து அண்ணலைத் தாழ்ந்து முன் நின்றான்; 

உக்கு உறு கண்ண நீர் ஒழுகும் மார்பினான். 

 

அக்கணத்து- (பரதன் கை நெகிழ்ந்த) அவ்வளவில்; அநுமனும்
அவண் நின்று ஏகி
- அநுமனும் அங்கிருந்து சென்று; அத்திக்குறு
மானத்தைச் செல்வன் எய்தி
-   அந்த   திசையளாவிப்   பரந்த
புட்பக விமானத்தை முறையாக  அடைந்து; உக்கு உறு கண்ண நீர்
ஒழுகும் மார்பினான்
- சிந்தி விழுகின்ற கண்ணீர் ஒழுகப்   பெற்ற
மார்பை உடையவனாய்; சக்கரத்து அண்ணலைத்