தாழ்ந்து முன் நின்றான் - இராமபிரானை வணங்கி முன்னே நின்றான். |
(311) |
10263. | 'உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கலுற்ற அப் |
| பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி, நாயினேன், |
| திருப் பொலி மார்ப! நின் வரவு செப்பினேன்; |
| இருப்பன ஆயின, உலகம் யாவையும். |
|
திருப்பொலி மார்ப! - திருமகள் தங்கிய மார்பை உடையவனே!; நாயினேன்- அடியேன்; உருப்பு அவிர் கனலிடை ஒளிக்கல் உற்ற அப் பொருப்பு அவிர் தோளனைப் பொருந்தி - வெப்பம் விளங்கும் நெருப்பின்கண் விழுந்து உயிர் துறக்கலுற்ற அந்த மலைபோல் விளங்கும் தோள் உடைய பரதனைச் சென்றடைந்து; நின் வரவு செப்பினேன் - நின்னுடைய வருகையைச் சொன்னேன்; (அதனால் அவன் நெருப்பின் கண் விழாதொழிந்தான் ஆகவே) உலகம் யாவையும் இருப்பன ஆயின - உலகம் எல்லாம் உயிர்பெற்று வாழ்வனவாயின. |
(312) |
10264. | 'தீவினை யாம் பல செய்ய, தீர்வு இலா |
| வீவினை முறை முறை விளைவ, மெய்ம்மையாய்! |
| நீ அவை துடைத்து நின்று, அழிக்க நேர்ந்ததால்; |
| ஆயினும், அன்பினாய்! யாம் செய் மா தவம்.' |
|
மெய்ம்மையாய்! - உண்மையின் வடிவமானவனே!; ஆயினும் அன்பினாய் - தாயைக் காட்டிலும் பேரன்புடையவனே!; யாம் பல தீவினை செய்ய - நாங்கள் பல தீய செயல்களைச் செய்ய; தீர்வு இலா வீவினை முறை முறை விளைவ - அச்செயல்கள் நீங்காமல் கெடுதிகளை முறை முறையாகத் தோற்றுவிப்பனவாயின; நீ அவை துடைத்து நின்று அழிக்க நேர்ந்தது- அனுமனாகிய நீ அத்தீமைகளை அடியோடு அழித்துப் போக்கும்படி ஆகியது; யாம் செய் மாதவம்- நாங்கள் செய்த புண்ணியப் பயனாலே ஆகும். (தொடரும்) |
''தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை, லீயாது அடி உறைந்தற்று'' என்னும் குறள் (208) பல தீவினைசெய்ய தீர்வு இலா வீவினை முறை முறை விளைவ'' என்னும் அடிகளில் அமைந்திருத்தல் காண்க. ஆல் - அசை. |
(313) |