பக்கம் எண் :

 மீட்சிப் படலம்585

10265.

என்று உரைத்து, அனுமனை இறுகப் புல்லினான்; 

ஒன்று உரைத்து இறுப்பது என், உனக்கும், 

எந்தைக்கும், 

இன் துணைத் தம்பிக்கும், யாய்க்கும்?' என்றனன் -

குன்று இணைத்தன உயர் குவவுத் தோளினான். 

 

என்று உரைத்து- என்று   இவ்வாறு   கூறி;   குன்று
இணைத்தன உயர்  குவவுத்  தோளினான் 
-   இரண்டு
குன்றுகள் நெருங்கினாற் போன்ற உயர்ந்து திரண்ட தோளினை
உடைய இராமன்;   அனுமனை   இறுகப்  புல்லினான்  -
அனுமனை  நன்கு    தழுவி;   உனக்கும்    எந்தைக்கும்
இன்துணைத்    தம்பிக்கும்   யாய்க்கும்
- அனுமனாகிய
உனக்கும், சத்திய   வாக்கினராகிய  தசரத  சக்கரவர்த்திக்கும்
என்னை    உடன்    பிரியாத      இனிய     துணையாகிய
இலக்குவனுக்கும்  தாயாகிய  கோசலைக்கும்; ஒன்று உரைத்து
இறுப்பது  என்
- நன்றியாக ஒரு வார்த்தை சொல்லி முடிப்பது
எவ்வாறு இயலும்? என்றனன்;
 

தம்பி என்பது பரதன் என்பாரும் உளர் - இன்துணைத் தம்பி
என்பது இலக்குவனைக் குறித்தலே சிறந்ததாம். 
 

(314)
 

10266.

ஈடுறு வான் துணை இராமன் சேவடி 

சூடிய சென்னியன், தொழுத கையினன், 

ஊடு உயிர் உண்டு என உலர்ந்த யாக்கையன், 

பாடு உறு பெரும் புகழ்ப் பரதன் தோன்றினான். 

 

பாடு உறு   பெரும்   புகழ்ப்  பரதன் - பெருமை
பொருந்திய சிறந்த புகழை உடைய பரதன்; ஈடு உறு வான்
துணை இராமன் சேவடி
-  தனக்குத்தானே   சமானமாய
சிறந்த  துணையாக உள்ள   இராமன்  திருவடி நிலைகளை;
சூடிய   சென்னியன்  -  சென்னி    மேல்   அணிந்து
கொண்டவனாய்;     தொழுத   கையினன் -  கைகளால்
வணங்கிக் கொண்டு; ஊடு உயிர் உண்டு என   உலர்ந்த
யாக்கையன் 
 -  உள்ளே   உயிரும்   இருக்கிறது    என்று
கண்டார்   கருதலாம்படி  வற்றிப் போன உடம்புடையவனாகி;
தோன்றினான் -   (இராமன முன்னாலே) வந்தான்.
 

இராமன்பால் முன்பு பெற்ற பாதுகைகளைத் தலை மேற் சூடி
வந்தான் என்பதாகும். 

(315)