வற்றின் தன்மையையும், மனிதர்களின் வலிமையையும்; உடன் ஆம் கொற்ற வானரத் தலைவர் தம் தகைமையும் - அம்மனிதரோடு வந்துள்ள வெற்றி பொருந்திய வானரத் தலைவர் தம் பெருமையையும்; கூறக்கிற்றும் கேட்டிரால் என்றனன் கிளத்துவான் துணிந்தான்- சொல்லும் வல்லமையுடையேம், கேட்பீர்களாக என்று சொல்லத் துணிந்தான். |
ஊற்றம் - வலிமை, கொற்றம் - வெற்றி கிற்றும் - ஆற்றலுடையேம் வலிமையுடையேம் கில் - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல். அதன் அடியாகப் பிறந்த 'கிற்றும்' என்பது தன்மைப் பன்மை வினைமுற்றாம். சொல்லுபவை இராவணனுக்குப் பிடிக்காதவையும், அவனது தோல்விகளுமாதலால் மாலியவான் சொல்லத் துணிந்தான். |
(39) |
9286. | 'பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்; |
| கரிய மால் வரை நிகர் கர தூடணர், கதிர் வேல் |
| திரிசிரா, அவர் திரைக்கடல் அன பெருஞ் சேனை, |
| ஒரு விலால், ஒரு நாழிகைப் பொழுதினின், உலந்தார். |
|
ஒருவிலால் பரிய தோளுடை விராதன், மாரீசனும் பட்டார்- (இராமனுடைய) ஒரே வில்லினால் பருத்த தோள்களையுடைய விராதனும், மாரீசனும் இறந்து பட்டார்கள்; கரிய மால்வரை நிகர் கரதுடணர், கதிர்வேல் திரிசிரா - கரிய பெரிய மலையை ஒத்தவரான கரனும், தூடணனும், ஒளி பொருந்திய வேற்படையை உடைய திரிசிராவும்; அவர் திரைக்கடல் அன பெருஞ்சேனை - அவர்களுடைய அலைகடல் போன்ற பெருஞ்சேனையும்; ஒரு நாழிகைப் பொழுதினின் உலந்தார் - ஒரு நாழிகைப் பொழுதினில் அழிந்துபட்டார்கள். |
இராமனுடைய ஒரு வில்லால் விராதன், மாரீசன், கரன், தூடணன், திரிசிரா முதலானவர்களும் அரக்கர் பெரும் படையும் அழிந்தமை கூறப்பட்டது. |
(40) |
9287. | 'ஆழி அன்ன நீர் அறிதிர் அன்றே, கடல் அனைத்தும் |
| ஊழிக் கால் எனக் கடப்பவன் வாலி என்போனை? |
| ஏழு குன்றமும் எடுக்குறும் மிடுக்கனை, இந் நாள், |
| பாழி மார்புஅகம் பிளந்து, உயிர் குடித்தது, ஓர் பகழி. |
|
ஆழி அன்னநீர் கடல் அனைத்தையும் ஊழிக்கால் எனக் - கடலைப்போன்று பரவியுள்ள நீங்கள், கடல்கள் எல்லாவற்றையும் |