பக்கம் எண் :

590யுத்த காண்டம் 

சுண்ணமும் -  வாசப்  பொடியும்;  சாந்தும்  -  சந்தனமும்;
நெய்யும்-  வாச  நெய்யும்;  சுரிவளை  முத்தும் -  வளைந்த
சங்கீன்ற முத்தும்; பூவும்- எண்ணெயும் - கலின மா விலாழியும் -
சேணம் பூட்டப் பெற்ற குதிரைகளின் நுரையும்; எண் இல் யானை
வண்ண  வார்  மதமும் 
- கணக்கற்ற யானைகளின் நிறமமைந்த
ஒழுக்காகிய  மதநீரும்;  நீரும் - மான்மதம் தழுவும் மாதர் கண்ண
ஆம்  புனலும் 
-  கஸ்தூரி  பூசிக்குளிக்கும்  மகளிரது   உடலில்
வழிந்தோடும் நீரும்; ஓடிக் கடலையும் கடந்த- பெருக்கெடுத்துச்
சென்று கடலையும் தாண்டிவிட்டன;
 

அன்று, ஏ - அசை. அயோத்தி நகர மக்களின் மகிழ்ச்சிப்
பெருக்கைப் புலப்படுத்தினர். 
 

(322)
 

இராமன் வசிட்டனை வணங்கல்
 

10274.

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி, அருளின் 

வேலை -

தனை இனிது அளித்த தாயர் மூவரும், தம்பிமாரும் 

புனையும் நூல் முனிவன்தானும், பொன் அணி 

விமானத்து ஏற,

வனை கழல் குரிசில் முந்தி, மா தவன் தாளில் 

வீழ்ந்தான்.

 

அனைவரும் அனையர் ஆகி அடைந்துழி  -  எல்லோரும்
அத்தன்மை  உடையவர்களாய் மகிழ்ச்சிப்  பெருக்கோடு  விமானம்
நெருங்கிய அளவில்; அருளின்  வேலை தனை இனிது அளித்த
தாயர் மூவரும்
- அருள்கடலாகிய இராமனைப் பெற்ற தாய்மார்கள்
மூவரும்; தம்பிமாரும்- பரத சத்துருக்கனன் ஆதியரும்; புனையும்
நூல் முனிவன் தானும்
- முப்புரிநூல் அணிந்த முனிசிரேஷ்டனான
வசிட்டனும்; பொன் அணி விமானத்து  ஏற- பொன்னால் அழகு
பெற்ற விமானத்தின்கண் ஏற வர; வனைகழல்   குரிசில- கட்டிய
வீரக்கழலை   உடைய   இராகவன்;  முந்தி-  முற்பட்டுச் சென்று;
மாதவன் தாளில்  வீழ்ந்தான் - வசிட்ட முனிவனது திருவடிகளில்
விழுந்து வணங்கினான்.
  

அயோத்தி   மதிலுக்குப்   புறம்பே   கீழிறங்கிய   விமானத்தில்
அனைவரும் அயோத்தி செல்ல எறினர் என உணர்க.
 

(323)