10275. | எடுத்தனன் முனிவன், மற்று அவ் இராமனை ஆசி |
| கூறி, |
| அடுத்துள துன்பம் நீங்க, அணைத்து அணைத்து, |
| அன்பு கூர்ந்து, |
| விடுத்துழி, இளைய வீரன் வேதியன் தாளில் வீழ, |
| வடித்த நூல் முனியும் முன்போல், வாழ்த்தினான், |
ஆசி கூறி.* |
|
மற்று அவ் இராமனை முனிவன் எடுத்தனன்- அங்கே இந்த இராமனை வசிட்ட முனிவன் தூக்கினான்; அடுத்துள துன்பம் நீங்க ஆசி கூறி - பிரிவினால் உண்டாகிய துன்பம் நீங்கும்படி ஆசீர்வாதம் செய்து; அணைத்து அணைத்து - தழுவி; விடுத்துழி - விடுத்தவுடன்; இளைய வீரன் - இலக்குவன்; வேதியன் தாளில் வீழ - வசிட்டன் திருவடியில் வீழ்ந்து வணங்க; வடித்த நூல் முனியும் - தேர்ந்த சாஸ்திர வல்லுநனான வசிட்டனும்; முன்போல் - இராமனுக்குச் செய்தது போலவே; ஆசி கூறி வாழ்த்தினான். |
அடுத்துள துன்பம் வசிட்டனதாகவும் இராமனதாகவும் கொள்ளலாம். |
(324) |
இராமன் தாயரை வணங்கல் |
10276. | கைகயன் தனயை முந்தக் கால் உறப் பணிந்து, |
| மற்றை |
| மொய் குழல் இருவர் தாளும் முறைமையின் |
| வணங்கு செங் கண் |
| ஐயனை, அவர்கள்தாமும் அன்புறத் தழுவி, தம் தம் |
| செய்ய தாமரைக் கணீரால் மஞ்சனத்தொழிலும் |
| செய்தார். |
|
முந்த - முற்பட; கைகயன் தனயை கால் உறப் பணிந்து - கேகயப் தரசன் மகளாகிய கைகேயித் தாயின் திருவடிகளில் நன்கு வணங்கி; மற்றை மொய்குழல் இருவர் தாளும் முறைமையின் வணங்கு - ஏனை நெருங்கிய கூந்தலை உடைய கோசலை, சுமித்திரை, ஆகிய இருவர் திருவடிகளையும் முறையாக வணங்குகின்ற; செங்கண் ஐயனை - சிவந்த கண்களை உடைய |