இராகவனை; அவர்கள் தாமும் அன்புறத் தழுவி - அத்தாய்மார்களும் அன்பினால் அணைத்து; தம் தம் செய்ய தாமரைக் கண் நீரால் மஞ்சனத் தொழிலும் செய்தார் - தம்முடைய சிவந்த தாமரை மலர் போன்ற கண்களிலிருந்து வருகின்ற கண்ணீரினாலே நீராட்டும் தொழிலையும் செய்தார்கள். |
அன்பினால் உண்டாகிய கண்ணீர்ப் பெருக்கால் முழுக்காட்டினர் என்க. கைகேயி அன்னையை முந்துறப் பணிந்தது அவள் சாபம் நீக்குதற்கு என்க. பலராலும் பாதிக்கப்பட்டவள் அவள் ஆதலின் அவள் துன்பம் பெரிதாயிற்று பெரிய பெருமாளுக்கு. |
(325) |
சீதையும் இலக்குவனும் வணங்கல் |
10277. | அன்னமும் முன்னர்ச் சொன்ன முறைமையின் |
| அடியில் வீழ்ந்தாள்; |
| தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர்தங்கள் |
| பொன் அடித் தலத்தில் வீழ, தாயரும் பொருந்தப் |
| புல்லி, |
| 'மன்னவற்கு இளவல் நீயே; வாழி!' என்று ஆசி |
| சொன்னார்.* |
|
அன்னமும் - சீதையும்; முன்னர்ச் சொன்ன முறைமையின் அடியில் வீழ்ந்தாள் - இராமன் வணங்கியதாகச் சொல்லிய முறைப்படியே கைகேயி, கோசலை, சுமித்திரை ஆகிய தாய்மார்கள் திருவடியில் வணங்கினாள்; தன் நிகர் இலாத வென்றித் தம்பியும் தாயர் தங்கள் பொன் அடித் தலத்தில் வீழ- தனக்குச் சமானம் இல்லாத வெற்றியை உடைய தம்பியாகிய இலக்குவனும் தாய்மார்களது பொலிவுற்ற திருவடிகளில் வீழ்ந்து வணங்க; தாயரும் பொருந்தப் புல்லி - தாய்மார்களும் நன்கு தழுவி; மன்னவற்கு நீயே இளவல் வாழி என்று ஆசி சொன்னார்- இராமனுக்கு நீயே தம்பியாவாய் வாழ்க என்று மங்கலம் உரைத்தார்கள். |
(236) |
பரதன் இராமனை வணங்கல். |
| |
10278. | சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி, |
| பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி, |