| நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன், நின்ற |
| நம்பி, |
| ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன், அழுது |
சோர்வான். |
|
நின்ற நம்பி - அங்கு நின்ற ஆடவர் திலகனாய இராகவன்; சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி - திருவடி நிலையாகிய பாதுகை இரண்டையும் தன் உள்ளத்து அன்பையும் அவ்விராகவனது திருவடிக்கீழ் தங்குவதாகச் சேர்ப்பித்து; பூ அடி பணிந்து வீழ்ந்த பரதனை - தன் மலர் போன்ற அடிகளில் வணங்கி விழுந்த பரதனைப் பார்த்து; பொருமி விம்மி- புலம்பி விம்மி; நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் - தன் நாவால் சொல்லத்தகும் வாசகம் ஒன்றும் உணராதவனாய்; அழுது சோர்வான் - புலம்பிச் சோர்ந்து; ஆலியும் உடலும் ஒன்ற தழுவினன் - உயிரும் உடலும் ஒன்றாகுமாறு தழுவினான். |
முன்பு பெற்ற பாதுகையை இப்போது அன்போடு முன் வைத்து வணங்கினான். |
(327) |
10279. | தழுவினன் நின்றகாலை, தத்தி வீழ் அருவி சாலும் |
| விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால், முருகின் |
| செவ்வி |
| வழுவுற, பின்னி மூசு மாசுண்ட சடையின் மாலை |
| கழுவினன், உச்சி மோந்து, கன்று காண் கறவை |
| அன்னான். |
|
தழுவினன் நின்ற காலை- இப்படி இராமன் பரதனைத் தழுவியபோது; தத்தி வீழ் அருவி காலும் விழு மலர்க் கண்ணீர் மூரி வெள்ளத்தால் - தவழ்ந்து வருகின்ற அருவி போன்ற சிறந்த மலர் போன்ற கண்களிலிருந்து பெருகிய வலிய நீர்ப் பெருக்கினால்; முருகின் செவ்வி வழுவுற - இளமையழகின் சிறப்பு குலையும்படி; பின்னி - முறுக்கி; மூசு மாசு உண்ட சடையின் மாலை - மொய்க்கின்ற அழுக்கு தின்ற சடைக்கற்றையை; கழுவினன் - கழுவியவனாய்; உச்சி மோந்து- பரதனது உச்சியை முகர்ந்து; கன்று காண் கறவை அன்னான்- தன் கன்றைக் கண்ட பசுவைப் போல ஆயினன். |
(328) |