பக்கம் எண் :

594யுத்த காண்டம் 

இலக்குவன் பரதனை வணங்கல்
 

10280.

அனையது ஓர் காலத்து, அம் பொன் சடை முடி

அடியது ஆக,

கனை கழல் அமரர் கோமாற் கட்டவன் - படுத்த  

காளை,

துனை பரி, கரி, தேர், ஊர்தி என்று இவை பிறவும், 

தோலின்

வினை உறு செருப்புக்கு ஈந்தான் விரை மலர்த் 

தாளின் வீழ்ந்தான்.

 

அனையது ஓர் காலத்து- அந்த நேரத்தில்;  கனை   கழல்
அமரர் கோமான்  கட்டவன்   படுத்த   காலை
-  செருக்கிய
வீரக்கழல் அணிந்த இந்திரனது  வென்றவனை   (இந்திரசித்துவை)
அழித்தொழித்த   வீரனாகிய இலக்குவன்; அம்பொன்  சடைமுடி
அடியது ஆக
-  தனது  அழகிய பொன்ம யமான  சடா மகுடம்
பரதனது அடியில் விழும்படி;   துனை பரி, கரி,  தேர்,  ஊர்தி
என்று  இவை  பிறவும்  தோலின்  வினை உறு  செருப்புக்கு
ஈந்தான்
-  விரைந்து செல்லும்  குதிரை,  யானை,  தேர்,  வாகனம 
என்று இவைகள்   எல்லாவற்றையும் ஆளும் தன்மையைத் தோலாற
செய்த  தொழில்  திறம்  அமைந்த  இராமனது   பாத  அணிக்குத்
தந்தவனாகிய பரதனது; விரை மலர்த்தாளின் வீழ்ந்தான் - மணம்
வீசும் மலர் போன்ற திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
 

பாதுகையை அரசாள வைத்த தன்மையை நயமாகக் குறித்தமை
உணர்ந்து இன்புறத் தக்கது. 
 

(329)
 

10281.

ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும் சிவிறி ஓட, 

தாள்தொடு தடக் கை ஆரத் தழுவினன் -  

'தனிமை நீங்கி,

காடு உறைந்து உலைந்த மெய்யோ, கையறு கவலை  

கூர

நாடு உறைந்து உலைந்த மெய்யோ, நைந்தது?' 

என்று உலகம் நைய.

  

(பரதன், அவனை) ஊடுறு கமலக் கண்ணீர் திசைதொறும்
சிவிறி ஓட
- தாமரை போன்ற  கண்களின்  உள்ளே   இருந்து
பெருகுகின்ற கண்ணீரானது நாலா பக்கங்களிலும் பரந்து சிதறி